தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
ஜார்க்கண்ட்: என்கவுன்டரில் மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக்கொலை
ஜார்க்கண்டின் லதேஹரில் போலீஸார் நடத்திய என்கவுன்டரில் மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதுகுறித்து பலமு டிஐஜி ஒய்.எஸ்.ரமேஷ் கூறுகையில், "மாவோயிஸ்ட் மணீஷ் யாதவ் தனது படையினருடன் காட்டில் காணப்பட்டதாக கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, போலீஸ் குழு அமைக்கப்பட்டு, தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆனால், பாதுகாப்புப் படையினரைக் கண்டவுடன் மாவோயிஸ்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
பாதுகாப்புப் படையினர் பதிலடித் தாக்குதலில் மணீஷ் யாதவ் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். சம்பவ இடத்திலிருந்து இரண்டு தானியங்கி துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டன. என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட மணீஷ் யாதவ் தலைக்கு ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு! மின் பற்றாக்குறையை சரிசெய்யுமா?
இதற்கிடையில், ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மற்றொரு தேடப்படும் மாவோயிஸ்ட் குந்தர் கெர்வார் என்கவுன்டர் இடத்தில் கைது செய்யப்பட்டார் என்றார். லதேஹரில் உள்ள மஹுவாதன்ர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கரம்காட் மற்றும் டவுனா காடுகளில் துப்பாக்கிச் சண்டை நடந்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்கவுன்டருக்குப் பிந்தைய தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு மாவோயிஸ்ட்டின் உடல் மீட்கப்பட்டு பின்னர் மணீஷ் யாதவ் என அடையாளம் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கிய என்கவுன்டர் திங்கள் காலை வரை தொடர்ந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
காடுகளில் மறைந்திருப்பதாக நம்பப்படும் மற்ற மாவோயிஸ்ட்களைக் கண்டுபிடிக்க அப்பகுதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.