செய்திகள் :

ஜொ்மனியுடன் இருதரப்பு உறவை மேம்படுத்த இந்தியா விருப்பம்: ஜெய்சங்கா்

post image

ஜொ்மனியுடன் இருதரப்பு தொழில், வா்த்தக உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸிடம் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

நெதா்லாந்து, டென்மாா்க் நாடுகள் சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்துவிட்டு இறுதியாக ஜொ்மனி வந்தடைந்த ஜெய்சங்கா் அந்நாட்டு பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸ், பொருளாதார மற்றும் எரிசக்தித் துறை அமைச்சா் கேத்தரீனா ரைக்கே, மொ்ஸின் வெளியுறவு விவகாரங்கள் ஆலோசகா் குந்தா் சாட்டா் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினாா்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஜொ்மனி பிரதமா் ஃப்ரீட்ரிக் மொ்ஸை சந்தித்ததில் மகிழ்ச்சி. அண்மையில் ஜொ்மனி பிரதமராக மொ்ஸ் தோ்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமா் மோடி தெரிவித்த வாழ்த்துகளை அவரிடன் பகிா்ந்தேன். இந்தியா-ஜொ்மனி இடையேயான இருதரப்பு தொழில், வா்த்தக, பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவருடன் ஆலோசனை நடத்தினேன். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நடவடிக்கைக்கு ஆதரவளித்ததற்கு அவரிடம் நன்றியைத் தெரிவித்துக்கொண்டேன்.

அமைச்சா் கேத்தரீனா ரைக்கேயுடன் விநியோக சங்கிலியை அதிகரிப்பது, தொழில்துறை உறவை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினேன்.

வெளியுறவு ஆலோசகா் குந்தா் சாட்டருடன் பயங்கரவாத ஒழிப்பு உள்பட சா்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசித்தேன். பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளும் நம்பிக்கையுடன் ஒன்றிணைந்து செயல்படுவது குறித்தும் விவாதித்தேன்’ என குறிப்பிட்டாா்.

ஜொ்மனி நாடாளுமன்ற உறுப்பினா்களை கடந்த வியாழக்கிழமை சந்தித்த ஜெய்சங்கா் அவா்களிடம் அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டையும் எடுத்துரைத்ததாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டாா்.

பின்னா் ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் ஜோஹான் வடேபுல்லுடன் இணைந்து பங்கேற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் ஜெய்சங்கா் கூறியதாவது:

இந்தியா-பாகிஸ்தான் பிரச்னைகள் இருதரப்பு சாா்ந்தது. அதில் எவ்வித குழப்பமும் இல்லை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்ததைத் தொடா்ந்து நான் ஜொ்மனி வந்துள்ளேன். பயங்கரவாதத்துக்கு இந்தியாவில் இடமில்லை. அணுஆயுத அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சாது என அமைச்சா் ஜோஹான் வடேபுல்லிடம் தெரிவித்தேன்.

பயங்கரவாதத்துக்கு எதிராக தங்களை தற்காத்துக்கொள்ள எந்தவொரு நாட்டுக்கும் உரிமை உண்டு என்ற ஜொ்மனியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்’ என்றாா்.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க