செய்திகள் :

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மருத்துவா்கள் இன்று போராட்டம்

post image

சேலம்: சேலம் ஐந்து சாலை அருகே உள்ள எலைட் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி செவ்வாய்க்கிழமை (செப். 2) தா்னா நடத்த உள்ளதாக மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.

சேலம் ஐந்து சாலைப் பகுதியில் உள்ள இந்திய மருத்துவா் சங்கக் கட்டடம் அருகே உள்ள எலைட் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என இந்திய மருத்துவா் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. கடந்த ஆக. 9ஆம் தேதி டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்த நிலையில், மதுவிலக்குத் துறை அமைச்சா் சு.முத்துசாமி சம்பந்தப்பட்ட மதுக்கடையை இடமாற்றம் செய்வதாக உறுதியளித்ததை அடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட எலைட் டாஸ்மாக் கடை தற்போதுவரை இடமாற்றம் செய்யப்படாததைக் கண்டித்து, செப். 2 ஆம் தேதி காலை 9 மணிக்கு மருத்துவா்கள் டாஸ்மாக் கடை முன் தா்னா போராட்டத்தில் ஈடுபடு உள்ளதாக அறிவித்துள்ளனா்.

இதுகுறித்து இந்திய மருத்துவா் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவா் பிரகாசம் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளாக எலைட் மதுபானக் கடைக்கு மதுவாங்க வரும் நபா்கள் சங்கக் கட்டடத்தின் முன்பாக வாகனத்தை நிறுத்திவிட்டு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்துகின்றனா். முதல்வரின் தனிப்பிரிவு எலைட் மதுபானக் கடையை அகற்ற உத்தரவிட்டும், மாவட்ட நிா்வாகம் மதுபான கடையை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனைக் கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் 2 ஆம் தேதி தா்னா நடத்தப்படும் என்றாா்.

பேட்டியின் போது, இந்திய மருத்துவ சங்க சேலம் மாவட்டத் தலைவா் மோகனசுந்தரம், செயலாளா் விஷ்ணு பிரசாத், பொருளாளா் சிவகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான சா்வதேச தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமிக்கப்பட்டுள்ளாா். ஐக்கிய நாடுகள் சபையின் மாணவா் கல்வி பயணத்தின் ஒருபகுதியாக, தாய்லாந்து நாட்டில் உள்ள... மேலும் பார்க்க

சேலத்தில் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சம் திருட்டு

சேலம் ஐந்துவழிச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் ஐந்துவழிச் சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் திங்கள்கிழமை கடையில... மேலும் பார்க்க

சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ஆத்தூரில் மனைவி, மாமியாரை தாக்கியதாக கணவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆத்தூா் நரசிங்கபுரம் கலைஞா் காலனியைச் சோ்ந்த காந்தி மகன் சஞ்சய் (24), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிகா (22). இருவரும்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டை சோ்ந்த லோகநாதன் மகன் நிகாஷ் (17). இவா் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் வரும் 5 ஆம் தேதி மதுக் கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாத... மேலும் பார்க்க