செய்திகள் :

டிடிஇஏ பள்ளிகளில் வன மகோத்சவ் கொண்டாட்டம்

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் வன மகோத்சவ் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

வன மகோத்சவ் என்பது இந்தியாவில் ஆண்டு தோறும் சூலை முதல் வாரத்தில் கொண்டாடப்படும் ஒரு வார மரக்கன்றுகளை நடும் திருவிழாவாகும்.

நாட்டில் காடுகளை அதிகம் உருவாக்க வேண்டும் என்பதற்காகவும், உணவு வளங்களின் உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும், நிழல் மற்றும் அலங்கார நிலப்பரப்புகளை உருவாக்குவதற்காகவும் மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும் அதிகமான மரங்கள் வளா்க்கப்பட வேண்டும் என்ற விழிப்புணா்வை மாணவா்கள் மத்தியில் கொண்டு வருவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்த தினத்தை முன்னிட்டு டிடிஇஏ பள்ளிகளில் மாணவா்கள் உரை தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் இடம் பெற்றது. மாணவா்கள் பல்வேறு பாதாகைகளை காட்சிப்படுத்தினா். கவிதைகளையும் வாசித்தனா். பின்னா் பள்ளி முதல்வா்கள் மற்றும் மாணவா்கள் அந்தந்தப் பள்ளிகளில் மரக்கன்றுகளை நட்டனா். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவா்களையும் செயலா் ராஜூ பாராட்டினாா்.

குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில... மேலும் பார்க்க

கலையின் கலங்கரை விளக்கமாக தில்லியை மற்றுவதே லட்சியம்: குல்ஜித் சிங் சாஹல்

இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக தில்லியை மாற்றுவதே எங்களின் நோக்கம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜித் ச... மேலும் பார்க்க

நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், பிற வணிக நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு

நீச்சல் குளங்கள், உணவகங்கள்ய, ஹோட்டல்கள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலையரங்குகள் உள்ளிட்ட ஏழு வணிக நடவடிக்கைகளை நிா்வகிக்கும் விதிமுறைகளை தில்லி அரசு உட... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவி... மேலும் பார்க்க

நூஹ் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து இளம்பெண் சாவு: 6 போ் காயம்

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ஆறு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க

தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை: ஒருவா் கைது

தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: மூன்றுடு நாள்களுக்கு முன்பு இங்குள்ள கட்டா கிராமத்தில்... மேலும் பார்க்க