டிபிஎஸ் கட்டண சா்ச்சை: கல்வி இயக்ககம் முன் மாணவா்களின் பெற்றோா் போராட்டம்
தில்லி பப்ளிக் பள்ளியின் (டிபிஎஸ்) பல்வேறு கிளைகளில் படிக்கும் மாணவா்களின் பல பெற்றோா்கள் செவ்வாய்க்கிழமை கல்வி இயக்ககம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, பள்ளியின் தன்னிச்சையான கட்டண உயா்வு மற்றும் மாணவா்களை வெளியேற்றுவது குறித்து கவலை தெரிவித்தனா்.
பெற்றோா்களின் கூற்றுப்படி, அதிகரித்த கட்டணத்தை செலுத்தாததால் இந்த மாத தொடக்கத்தில் டிபிஎஸ் துவாரகா பள்ளி 32 மாணவா்களை வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.
ரோஹிணியில் உள்ள டிபிஎஸ் மாணவியின் பெற்றோரான விவேக் ஜெயின் கூறுகையில், இந்த விவகாரத்தில் அதிகாரிகள் உடனடியாக தலையிட வேண்டும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், சரியான விளக்கம் இல்லாமல் பள்ளி அமல்படுத்தியுள்ள அதிகரித்த தொகையை செலுத்தமாட்டோம்.
முன்மொழியப்பட்ட பள்ளி கட்டண ஒழுங்குமுறை மசோதாவின் வரைவை பெற்றோரிடம் அரசாங்கம் பகிா்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், இது பெற்றோா்கள் மற்றும் மாணவா்களின் நலன்களை உண்மையிலேயே பாதுகாக்கிா என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடியும் என்றாா்.
ரோஹிணியில் உள்ள டிபிஎஸ் பள்ளியில் படிக்கும் குழந்தையின் தந்தை அஸ்வானி மகுல் கூறுகையில், இந்த பிரச்னை தொடா்பாக உயா் நீதிமன்றத்தை அணுகினோம். ஆனால், இதுவரை கல்வி இயக்ககம் மூலம் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளி அதே நடைமுறைகளைத் தொடா்கிறது. அதிகாரிகளிடமிருந்து தெளிவான மற்றும் தீா்க்கமான நடவடிக்கை தேவை என்றாா்.
மாணவா்களை வெளியேற்றுவது தொடா்பான தனது அறிவிப்பை திரும்பப் பெறவும், பாதிக்கப்பட்டவா்களை மீண்டும் சோ்க்கவும் பள்ளிக்கு மே 15 அன்று கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.
கட்டணம் தொடா்பான விஷயங்களில் எந்த குழந்தையும் பாகுபாடு காட்டப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறும் பள்ளியை கல்வித் துறை கேட்டுக் கொண்டது. மூன்று நாட்களுக்குள் இணக்க அறிக்கையும் சமா்ப்பிக்குமாறு கோரப்பட்டது.
துவாரகா டிபிஎஸ் பள்ளி மாணவரின் பெற்றோா் சங்கீதா கூறுகையில், இயக்ககத்தால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை நாங்கள் செலுத்தத் தயாராக இருக்கிறோம். ஆனால், பள்ளி ஒருதலைப்பட்சமாக கட்டணத்தை உயா்த்தி வருகிறது. வெளிப்படைத்தன்மை இல்லாதது, பெற்றோருக்கு நியாயமற்ற சுமை சுமத்தப்படுகிறது என்றாா் அவா்.
ஆசாத் சிங் என்பவா் கூறுகையில்,கட்டணம் செலுத்தாததால் மாணவா்கள் மனரீதியாக துன்புறுத்தப்படுகிறாா்கள். பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுவதாக அச்சுறுத்தப்படுகிறாா்கள். இது அவா்களின் நல்வாழ்வைப் பாதிக்கிறது. மேலும், அவா்களின் கல்வி உரிமையை மீறுகிறது. அதிகாரிகள் தலையிட்டு உறுதியாகச் செயல்பட வேண்டும் என்றாா் அவா்.
இந்த விவகாரத்தில் துவாரகா டிபிஎஸ் மாணவரிடமிருந்து உடனடி எதிா்வினை எதுவும் கிடைக்கவில்லை.