செய்திகள் :

டெல்லி: தீ விபத்தில் தப்பிக்க, பால்கனியில் இருந்து குதித்த 3 பேர் உயிரிழப்பு

post image

டெல்லி துவாரகைப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் எட்டாம் மற்றும் ஒன்பதாம் மாடியில் நேற்று காலை 10 மணியளவில் தீப்பிடித்திருக்கிறது. தீயும், புகையும் மிக வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

அதிலிருந்து தப்பிக்க அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மற்றும் சிறுமி பால்கனியில் இருந்து குதித்துள்ளனர். இவர்களுடைய தந்தை யஷ் யாதவ்வும் (35 வயது) பால்கானியில் குதித்துள்ளார். இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றப்போது, ஏற்கெனவே இவர்கள் மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தீ விபத்து - டெல்லி
தீ விபத்து - டெல்லி

யாதவின் மனைவி மற்றும் மூத்த மகன் மட்டும் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளனர். இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த தீ விபத்து பெரிதும் பரவாமல் இருக்க, உடனடியாக அங்கே மின்சாரம் மற்றும் கியாஸ் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

எட்டாம் மற்றும் ஒன்பதாம் மாடியில் தீவிபத்து ஏற்பட்டிருந்ததால், ஸ்கை லிஃப்ட் மூலம் தீயணைப்புத் துறை மக்களை மீட்டுள்ளனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: "அந்த ஒருவரைப் பார்த்தேன்; உடல்களை மீட்கும் பணி முடிந்துவிட்டது" - அமித் ஷா

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது.விமான நிலையத... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: "என் குழந்தையே எங்கே போனாய்..!" - கதறி அழும் விமான பணிப்பெண்ணின் குடும்பம்

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து இன்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. விமான நிலைய... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: `மகளைக் காண லண்டன் கிளம்பினார்'- விபத்தில் சிக்கி முன்னாள் முதல்வர் மரணம்

குஜராத்தின் தலைநகர் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் ஒரு... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: `கருப்புப் பெட்டி கிடைத்தால்தான்...' - விமான போக்குவரத்து முன்னாள் அமைச்சர்

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானம் விபத்துக்குள்ளாகி, அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்... மேலும் பார்க்க