டெல்லி: தீ விபத்தில் தப்பிக்க, பால்கனியில் இருந்து குதித்த 3 பேர் உயிரிழப்பு
டெல்லி துவாரகைப் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றின் எட்டாம் மற்றும் ஒன்பதாம் மாடியில் நேற்று காலை 10 மணியளவில் தீப்பிடித்திருக்கிறது. தீயும், புகையும் மிக வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளது.
அதிலிருந்து தப்பிக்க அந்த குடியிருப்பில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் மற்றும் சிறுமி பால்கனியில் இருந்து குதித்துள்ளனர். இவர்களுடைய தந்தை யஷ் யாதவ்வும் (35 வயது) பால்கானியில் குதித்துள்ளார். இவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றப்போது, ஏற்கெனவே இவர்கள் மூவரும் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

யாதவின் மனைவி மற்றும் மூத்த மகன் மட்டும் தீ விபத்தில் இருந்து தப்பித்துள்ளனர். இவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த தீ விபத்து பெரிதும் பரவாமல் இருக்க, உடனடியாக அங்கே மின்சாரம் மற்றும் கியாஸ் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் மற்றும் ஒன்பதாம் மாடியில் தீவிபத்து ஏற்பட்டிருந்ததால், ஸ்கை லிஃப்ட் மூலம் தீயணைப்புத் துறை மக்களை மீட்டுள்ளனர். இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.