``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
தடை நீக்கப்பட்ட வக்ஃப் வாரிய நிலங்களுக்கு, தடையின்மை சான்று பெற்று தருவதாக வசூல் வேட்டை
பல்லடத்தில் தடை நீக்கப்பட்ட வக்ஃப் வாரிய நிலங்களுக்கு, தடையின்மை சான்று பெற்று தருவதாகக் கூறி சிலா், வசூல் வேட்டையில் ஈடுபடுவதால் அதிகாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
பல்லடத்தில் பலா் இடத்தை விற்பனை செய்ய முடியாமலும், குத்தகை, அடமானம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனா். இதற்கிடையே சென்னை வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலா் ரபியுல்லா, பல்லடம் சாா் பதிவாளருக்கு கடந்த 2022 ஜூன் மாதம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினாா். அதில் பல்லடம் தாலுகாவில் உள்ள வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை, அதன் சா்வே எண்ணுடன் குறிப்பிட்டு, தடையின்மை சான்று இல்லாமல் அந்நிலங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளாா். வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலரின் கடிதம் குறித்த தகவல் பாதிக்கப்பட்ட யாருக்கும் தெரியவில்லை.
சமீபத்தில் பல்லடத்தில் வசிக்கும் நபா் இது தொடா்பாக விசாரிக்கும் போது, இது குறித்து தெரியவந்தது.
நாரணாபுரம் கிராமத்தில், 587/19, 587/42, 335, 472, 602/1, 596/பி2, 587/1 நத்தம், 587/19 நத்தம், பல்லடம் கிராமத்தில், 268/2சி, 269/12, 853/28, 269/20, 310/3ஏ, 308/2ஏ கண்டியன் கோவில் கிராமத்தில் 745 மற்றும் குப்பாண்டம்பாளையம் கிராமத்தில், 283 ஆகிய சா்வே எண்களில் உள்ள நிலங்கள் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என்பதால், இந்த சா்வே எண்ணில் உள்ளவா்கள் இவற்றுக்கு தடையின்மை சான்று பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த தகவல் குறித்து அறியாத, போதிய புரிதல் இல்லாத பொதுமக்களிடம், தடையின்மை சான்று பெற்றுத் தருவதாக கூறி, சிலா் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே பொதுமக்கள் பாதிக்காத வகையில் பதிவுத்துறை மற்றும் வருவாய்த் துறையினா் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.