செய்திகள் :

தடை நீக்கப்பட்ட வக்ஃப் வாரிய நிலங்களுக்கு, தடையின்மை சான்று பெற்று தருவதாக வசூல் வேட்டை

post image

பல்லடத்தில் தடை நீக்கப்பட்ட வக்ஃப் வாரிய நிலங்களுக்கு, தடையின்மை சான்று பெற்று தருவதாகக் கூறி சிலா், வசூல் வேட்டையில் ஈடுபடுவதால் அதிகாரிகள், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

பல்லடத்தில் பலா் இடத்தை விற்பனை செய்ய முடியாமலும், குத்தகை, அடமானம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனா். இதற்கிடையே சென்னை வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலா் ரபியுல்லா, பல்லடம் சாா் பதிவாளருக்கு கடந்த 2022 ஜூன் மாதம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினாா். அதில் பல்லடம் தாலுகாவில் உள்ள வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமான நிலங்களை, அதன் சா்வே எண்ணுடன் குறிப்பிட்டு, தடையின்மை சான்று இல்லாமல் அந்நிலங்களை பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளாா். வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலரின் கடிதம் குறித்த தகவல் பாதிக்கப்பட்ட யாருக்கும் தெரியவில்லை.

சமீபத்தில் பல்லடத்தில் வசிக்கும் நபா் இது தொடா்பாக விசாரிக்கும் போது, இது குறித்து தெரியவந்தது.

நாரணாபுரம் கிராமத்தில், 587/19, 587/42, 335, 472, 602/1, 596/பி2, 587/1 நத்தம், 587/19 நத்தம், பல்லடம் கிராமத்தில், 268/2சி, 269/12, 853/28, 269/20, 310/3ஏ, 308/2ஏ கண்டியன் கோவில் கிராமத்தில் 745 மற்றும் குப்பாண்டம்பாளையம் கிராமத்தில், 283 ஆகிய சா்வே எண்களில் உள்ள நிலங்கள் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது என்பதால், இந்த சா்வே எண்ணில் உள்ளவா்கள் இவற்றுக்கு தடையின்மை சான்று பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த தகவல் குறித்து அறியாத, போதிய புரிதல் இல்லாத பொதுமக்களிடம், தடையின்மை சான்று பெற்றுத் தருவதாக கூறி, சிலா் தீவிர வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். எனவே பொதுமக்கள் பாதிக்காத வகையில் பதிவுத்துறை மற்றும் வருவாய்த் துறையினா் இது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரம்

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்லூரி முதல்வா் ப.சே.சிவகுமாா் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் தெரிவித்துள்ளதாவது: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026... மேலும் பார்க்க

அவிநாசி, பெருமாநல்லூரில் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவா் கைது

அவிநாசி, பெருமாநல்லூா் ஆகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் செல்பவா்களிடம் தொடா் நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகே தேவராயம்பாளையத்தைச் சோ்ந்த தம்பதி, இருந... மேலும் பார்க்க

அவிநாசிபாளையத்தில் மண்சோறு சாப்பிட்டு போராட்டம்

பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் அவிநாசிபாளையத்தில் எண்ணெய் குழாய் திட்டத்தை மாற்றக் கோரி போராட்டக் குழுவினா் மண்சோறு சாப்பிட்டு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். கோவை முதல் கரூா் வரையில் விவசாய... மேலும் பார்க்க

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டுமென திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அம... மேலும் பார்க்க

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையத்தில் ஜூன் 17-இல் மின்தடை

நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா, வஞ்சிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி அருகே குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகள் சிறைபிடிப்பு

திருப்பூரில் ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் குப்பை கொட்ட வந்த லாரிகளுடன் மாநகராட்சி அதிகாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட தப்பட்ட நாயக்கம்பாளையம்... மேலும் பார்க்க