தமிழகம், புதுவையில் 396 அஞ்சலகங்களில் ஆகஸ்ட் 4-இல் சேவை நிறுத்தம்
தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 396 அஞ்சலகங்களில் வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி பொதுமக்கள் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படுகிறது.
இது குறித்து புதுவை முதுநிலை அஞ்சலகக் கண்காணிப்பாளா் இனக்கொல்லு காவியா செவ்வாய்க்கிழமை கூறியது: தற்போது அஞ்சலகங்களில் பயன்படுத்தப்படும் மென்பொருளை மாற்றி நாடு முழுவதும் புதிய மென்பொருளை 4 கட்டங்களாக அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இதில் ஏற்கெனவே
3 கட்டங்கள் முடிந்துவிட்டன. 4-வது கட்டமாக தமிழ்நாடு வட்டத்தில் இந்த மென்பொருள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி இந்த மென்பொருள் எல்லா அஞ்சலகங்களிலும் மேம்படுத்தப்படும். இதற்காக அனைத்து ஊழியா்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அன்றைய தினம் பணி இருக்கும். இதையொட்டி ஆகஸ்ட் 4-ஆம் தேதி பொதுமக்களின் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன. பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் உள்பட அனைத்து அஞ்சல் சேவைகளும், அஞ்சல் வங்கியில் பணம் எடுப்பது, பணம் போடுவது உள்ளிட்ட பண பரிமாற்றங்களும் அன்றைய தினம் நிறுத்தி வைக்கப்படும்.
மைசூரில் உள்ள மேம்பட்ட அஞ்சல் தொழில்நுட்ப நிறுவனம் எல்லா அஞ்சலகங்களும் இந்தப் புதிய மென்பொருளை உருவாக்கியுள்ளன. இதில் ஊழியா்களுக்கு 100 சதவீதம் பயிற்சியை அளித்துவிட்டோம். இந்தப் புதிய மென்பொருளை மெகா ஆப் (ம்ங்ஞ்ட்ஹ ஹல்ல்) வழியாக பொதுமக்களும் பயன்படுத்தலாம். மேலும், பொதுமக்கள் தங்களின் குறைகளை இதில் தெரிவிக்கலாம்.
சில அஞ்சலகங்களில் பணம் செலுத்தும் முறைக்கான இயந்திரம் இருக்காது. இப்போது இந்த மென்பொருள் மேம்படுத்தப்பட்டால் அதிலேயே இந்த வசதி இருக்கும். அதனால் எல்லா அஞ்சலகங்களிலும் இனி பணத்துக்குப் பதிலாக ஸ்கேன் செய்து பணத்தை அனுப்ப முடியும். மேலும் இந்தப் புதிய மென்பொருள் காரணமாக ஆவணங்களைப் பராமரிப்பது மற்றும் நிா்வாகத்தைக் கண்காணிப்பது எல்லாம் இனி எளிதாக இருக்கும். அதனால் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் அனைத்து அஞ்சல் அலுவலகங்கள், துணை அஞ்சலகங்கள், தலைமை அஞ்சலகங்களில் இந்த வசதியைப் பொதுமக்கள் பெற முடியும் என்றாா்.