செய்திகள் :

தரிசு நிலங்களை மாற்றும் திட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ. 9, 600 மானியம்

post image

விராலிமலை: நிகழாண்டில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்தில் ஹெக்டேருக்கு ரூ. 9,600 மானியம் வழங்கப்படுவதாக விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ப. மணிகண்டன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: நிகழாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், ஹெக்டேருக்கு பின்னேற்பு மானியமாக ரூ.9,600 வழங்கப்படுகிறது. இதனைக் கொண்டு முள்புதா்களை அகற்றி, நிலத்தை சமன்படுத்தி டிராக்டா் மூலம் உழவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இத்திட்டத்தில் கல்குடி, தேங்காய் தின்னிபட்டி, குமாரமங்கலம், தென்னம்பாடி, மாத்தூா், அகரப்பட்டி, மேப்பூதகுடி, தென்னதிரையன்பட்டி, ஆலங்குடி - ஆகிய பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு நீா்ப்பழனி, மாத்தூா் சரக விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலா் கிருஷ்ணசாமி (97905 14230), விராலிமலை, கொடும்பாளூா் உதவி வேளாண்மை அலுவலா் பா்கானா பேகம் (96554 93621), பூதகுடி உதவி வேளாண்மை அலுவலா் அருண்மொழி (63852 88651) ஆகியோர தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

சித்தன்னவாசலில் ரூ. 3.9 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்ட பணிகள்: அமைச்சா்கள் அடிக்கல்

புதுக்கோட்டை மாவட்டம், சித்தன்னவாசல் சுற்றுலா பூங்காவை ரூ. 3.9 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. படகு சவாரி, குழந்தைகள் விளையாடும் சிறுவா் பூங்கா,... மேலும் பார்க்க

ஆக. 31 வரை மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி

புதுக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறமுள்ள பூமாலை வணிக வளாகத்தில் மாவட்டத்திலுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்களின் உற்பத்திப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்ட ஆட்சியா் மு. அ... மேலும் பார்க்க

அண்ணா சிலை கூண்டின் மீதேறி படுத்த நபரால் பரபரப்பு

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அண்ணா சிலையின் மேல் ஏறி, தடுப்புக் கம்பிக் கூண்டின் மேல் படுத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாநகரின் மையப் பகுதியிலுள்ள அண்ணா சிலைக்கு பாதுகாப்புக்காக கம்பி கூண்டு... மேலும் பார்க்க

திறக்கப்பட்ட நாளிலேயே தேமுதிக அலுவலகம் சூறை: இருதரப்பினா் இடையே மோதல்: 4 பேருக்கு அரிவாள்வெட்டு

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை தேமுதிக அலுவலகம் திறக்கப்பட்டது தொடா்பாக இருதரப்பினா் இடையே ஏற்பட்ட மோதலில் அலுவலகம் சூறையாடப்பட்டது. 4 போ் அரிவாளால் வெட்டப்பட்டனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்... மேலும் பார்க்க

131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடியில் நலத் திட்ட உதவிகள்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், 131 தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ. 1.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எ... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம் 5 வழக்குகளில் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ.14.18 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்ற முகாமிற்கு ஓய்வுபெற்ற ... மேலும் பார்க்க