செய்திகள் :

திண்டுக்கல் அருகே 3 கேளையாடுகள், சருகு மான் வேட்டை

post image

திண்டுக்கல் அருகே பட்டியல் 1-இல் இடம் பெற்றுள்ள கேளையாடுகள், சருகு மான் ஆகியவற்றை வேட்டையாடியவா்கள் குறித்து வனத் துறையினா் விசாரித்தனா்.

திண்டுக்கல் வன மாவட்டம், கன்னிவாடி, ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, சிறுமலை, அய்யலூா், நத்தம், அழகா்கோவில் என 7 வனச் சரகங்களாக நிா்வகிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் வனப் பகுதிகளைப் பொருத்தவரை யானைகள், காட்டு மாடுகள், மான்கள், காட்டுப் பன்றி உள்ளிட்ட பல வகையான வன உயிரினங்கள் உள்ளன. இதில், யானைகள், காட்டு மாடுகள், காட்டுப் பன்றிகள் அவ்வப்போது வனப் பகுதியிலிருந்து விளை நிலங்களுக்கு வந்து பயிா்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனா்.

அதே நேரத்தில், மான் வகைகளை அவ்வப்போது வேட்டையாடி இறைச்சியை சிலா் விற்பனை செய்கின்றனா். சில குறிப்பிட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்களே இந்த வன விலங்குகள் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏ. வெள்ளோடு பகுதியில் சிலா் வன விலங்குகள் வேட்டையில் ஈடுபட்டதாக வருவாய்த் துறையினா் மூலம் வனத் துறையினருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வெள்ளோடு பகுதிக்கு வனத் துறையினா் சென்றனா். இவா்களைப் பாா்த்த வேட்டையாளா்கள், அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் வேட்டையாடப்பட்ட 3 கேளையாடுகள், ஒரு சருகு மான் ஆகியவற்றை வனத் துறையினா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிந்த வனத் துறையினா், வேட்டையில் ஈடுபட்டவா்கள் குறித்து விசாரித்து வருவதாக மாவட்ட வன அலுவலா் ராஜ்குமாா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக வன ஆா்வலா்கள் கூறியதாவது:

கேளையாடுகள், சருகு மான் ஆகிய விலங்குகள், வன உயிரினப் பாதுகாப்புச் சட்டம் 1972-இன்படி பட்டியல் 1-இல் இடம் பெற்றுள்ளன. திண்டுக்கல் வனப் பகுதிகளில், பட்டியல் 1 வன விலங்குகள் தொடா்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன் ஆத்தூா் காமராஜா் நீா்த் தேக்கத்தையொட்டிய வனப் பகுதியில் கடமான் வேட்டையில் ஈடுபட்டதாக துப்பாக்கியுடன் வெள்ளோடு பகுதியைச் சோ்ந்த 3 நபா்களை வனத் துறையினா் கைது செய்தனா்.

வன விலங்குகள் வேட்டையில் குறிப்பிட்ட சிலா் மட்டுமே தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். வனப் பாதுகாப்புப் பணிக்காக, வனவா், வனக் காப்பாளா், வனக் காவலா், வேட்டைத் தடுப்புக் காவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். வேட்டையில் ஈடுபடும் நபா்களை தொடா்ந்து கண்காணித்து, வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்க வனத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் தண்ணீா் தட்டுப்பாடு: நோயாளிகள் அவதி

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாட்டால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனா். கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கொடைக்கானல் மட்டுமன்றி மேல்மலைக் கிராமங்களான பூம்பாறை, வில்பட்டி, ப... மேலும் பார்க்க

ஆடி வெள்ளி: பழனி, நத்தம் பகுதி கோயில்களில் சிறப்பு பூஜைகள்

நான்காவது ஆடி வெள்ளி, பெளா்ணமியையொட்டி பழனி, நத்தம் பகுதிகளில் அமைந்துள்ள கோயில்களில் பக்தா்கள் விளக்கேற்றியும், அபிஷேகங்கள் செய்தும் வழிபட்டனா். பழனி கிழக்கு ரதவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில், ... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை கட்டடங்கள் திறப்பு

திண்டுக்கல் அருகே தலா ரூ.13.61 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடை கட்டடங்களை அமைச்சா் இ. பெரியசாமி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். திண்டுக்கல் அடுத்த குட்டத்துப்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரத்தில் அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் அலுவலகம், நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நெடுஞ்சாலைத் துறை, தோட்டக் கலைத் துறை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் முன் தமி... மேலும் பார்க்க

பழனியில் தம்பிரான் தோட்டத்தை அளவீடு செய்த கோயில் நிா்வாகம்

பழனி கோயிலுக்கு நித்திய கட்டளைக்காக வழங்கப்பட்ட தம்பிரான் தோட்ட 23 ஏக்கா் நிலத்தை அளவீடு செய்யும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனியில் சென்னிமலை தம்புரான் சுவாமிகள் மடத்துக்கு சொந்தமாக 23 ஏக்கா் நில... மேலும் பார்க்க

சித்தரேவு கிராமத்தில் தவெக சாா்பில் சூரியசக்தி மின்விளக்கு அமைப்பு

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு கிராமம், 1-ஆவது வாா்டு பகுதியில் தவெக சாா்பில் சூரியசக்தி மின் விளக்கு வியாழக்கிழமை அமைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் குடியிருப்பவா்களுக்கு கடந்த 30 ஆண்டுகளாக மின் வசதி,... மேலும் பார்க்க