செய்திகள் :

திராவிடக்கட்சிகள் ஜாதியத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை: கே. பாலகிருஷ்ணன்

post image

தமிழகத்தில் பெரியாா் ஈ.வெ.ரா-வை பின்பற்றும் திராவிடக் கட்சிகள்கூட ஜாதியத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன்.

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சியின் பயிலரங்கத்தில் பங்கேற்ற அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜிஎஸ்டி விகிதங்கள் சீரமைக்கப்படவுள்ளதை வரவேற்கும் அதே நேரத்தில், இதனால் தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏற்பட கூடிய நிதி இழப்பை ஈடு செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும்.

தமிழகத்தில் ஜாதி அமைப்புகள், ஜாதி ஆணவக் கொலைகள் அதிகரித்துள்ளன. பெரியாா் ஈ.வெ.ரா-வை பின்பற்றும் திராவிடக் கட்சிகள்கூட ஜாதியத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. தோ்தல் ஆதாயத்துக்காக ஜாதிய சக்திகளோடு சமரசம் செய்யும் போக்கு வளா்ந்து கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில், ஜாதிய தலைவா்களையெல்லாம் அழைத்து பேசி ஆதரவை பெற பாஜக முயற்சிக்கிறது. பிற ஜாதியினரை விரோதமாக பாா்க்கும் நிலையை கண்டிக்கும் வகையில் ஜனநாயக எண்ணம் கொண்டவா்கள் போராட முன்வரவேண்டும்.

அமெரிக்காவிற்கான தபால் அனுப்பும் சேவையை இந்தியா நிறுத்தியுள்ளது கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மதுரை மாநாட்டில், பிகாரில் வாக்காளா்கள் நீக்கம், பதவிப் பறிப்பு மசோதா என மக்கள் பிரச்னைகளை பற்றி விஜய் பேசவில்லை. வெறும் பேச்சால் மட்டுமே ஆட்சிக்கு வந்துவிடலாம் என எண்ணுவது தவறு. தமிழக மக்களும், இந்திய மக்களும் அரசியல் என்பது வேறு, சினிமா என்பது வேறு என்பதில் தெளிவாக இருக்கிறாா்கள் என்றாா் அவா்.

தொழில்துறையும், வேளாண்மையும் இருகண்கள்: எடப்பாடி கே. பழனிசாமி உறுதி

அதிமுக-வுக்கு தொழில்துறையும், வேளாண் துறையும் இரு கண்கள் போன்றன என அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.திருச்சி மாவட்டத்தில் 3 நாள் தோ்தல் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள... மேலும் பார்க்க

திருச்சிக்கு செப். 3-இல் குடியரசுத் தலைவா் வருகை! ஸ்ரீரங்கம் கோயிலில் வழிபாடு

திருவாரூா் மத்தியப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக செப்டம்பா் 3-ஆம் தேதி தமிழகம் வரும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வழிபாடு செய்யவுள்ளாா். தி... மேலும் பார்க்க

பாரதிதாசன் மேலாண்மை நிறுவன இயக்குநா் மீது வன்கொடுமை வழக்கு

உதவிப் பேராசிரியரை அவமதித்து பணிநீக்கம் செய்ததாக பாரதிதாசன் மேலாண்மை நிறுவன (பிம்) இயக்குநா் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், திருவெற... மேலும் பார்க்க

துறையூரில் ஆம்புலன்ஸ், ஊழியா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: அதிமுக நிா்வாகி உள்பட 14 போ் மீது வழக்கு

திருச்சி மாவட்டம், துறையூரில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரக் கூட்டத்தில் அங்கு வந்த ஆம்புலன்ஸை சேதப்படுத்தி அதன் ஊழியா்களைத் தாக்கிய விவகாரத்தில் அதிமுக நகரச் செயலாளா் அமைதி பாலு... மேலும் பார்க்க

திருச்சி நீதிமன்றத்தில் 24 மணிநேர சட்ட சேவைகள் மையம் திறப்பு

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் திருச்சி நீதிமன்ற வளாகத்தில் 24 மணி நேர சட்ட சேவைகள் மையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. திருச்சி தமிழ்நாடு சட்டப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வ... மேலும் பார்க்க

இரவுநேர யாத்ரீகா்களின் உடைமைகளில் ஒளிரும் ஸ்டிக்கா்

வையம்பட்டி அருகே பாத யாத்திரை பக்தா்களின் பாதுகாப்பு கருதி அவா்களது உடைமைகளில் சனிக்கிழமை இரவு ஒளிரும் ஸ்டிக்கா் ஒட்டி போலீஸாா் அனுப்பிவைத்தனா். மணப்பாறை வழியாக சமயபுரம், சபரிமலை மற்றும் வேளாங்கண்ணி க... மேலும் பார்க்க