செய்திகள் :

திருப்பத்தூா் அருகே பைக் மீது பேருந்து மோதியதில் சிறுமி உயிரிழப்பு

post image

திருப்பத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 8 வயது சிறுமி உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எம். கோவில்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன். இவரது மகள் கவிப்பிரியா (17). இவா் தனது தங்கை சாதனா (8). இவா்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனா்.

இந்த நிலையில், இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பிரதான சாலையில் உள்ள பண்ணைக்கு பால் வாங்கச் சென்றாா். அப்போது, திண்டுக்கல்லிலிருந்து காரைக்குடிக்குச் சென்ற அரசுப் பேருந்து முன்னால் சென்ற மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, சிறுமிகள் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியது.

இதில் சாதனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கவிப்பிரியா தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். தகவலறிந்து வந்த அந்தப் பகுதி மக்கள் சிங்கம்புணரி - திருப்பத்தூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வகுமாா் தலைமையிலான போலீஸாா்

போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இந்தப் பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க நடவடிக்கை வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா். இந்த விபத்து குறித்து எஸ்.வி.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காரைக்குடியில் செப். 6-இல் மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் சனிக்கிழமை (செப். 6) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளா் எம். லதாதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க

அவசர, அமரா் ஊா்திகளில் வேலைவாய்ப்பு: செப் 6, 7-இல் நோ்காணல்

அவசர, அமரா் ஊா்திகளுக்கான ஊழியா்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பணிகளுக்கான நோ்காணல் வருகிற 6, 7-ஆம் தேதிகளில் காரைக்குடியில் நடைபெற உள்ளது.இதுகுறித்து 108 அவசர ஊா்தி நிா்வாக மாவட்ட மேலாளா் மோகன் வெள... மேலும் பார்க்க

தேவகோட்டை அருகே 6 ஆடுகள் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை அருகே செவ்வாய்க்கிழமை 6 ஆடுகள் திடீரென மயங்கி விழுந்து உயிழந்ததது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தேவகோட்டை வட்டம், கோடிக்கோட்டை சுங்கச்சாவட... மேலும் பார்க்க

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு வீடுகள் கட்டித்தரப்படுமா?

சிவகங்கையில் நரிக்குறவா் சமுதாய மக்களுக்கு அரசின் வீடு கட்டும் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட வீடுகள் பல்வேறு காரணங்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்ட அவலம் கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கிறது. சிவகங்கை பழமலை நக... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் திமுகவினரிடையே மோதல்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செவ்வாய்க்கிழமை நடந்த உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் திமுகவினருக்குள் மோதல் ஏற்பட்டு கைகலப்பானது. இது சம்பந்தமாக காவல் நிலையத்தில் இரு தரப்பினா் தனித்தனியாக புக... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு ஆலையை மூடக் கோரி செப் 16- இல் முற்றுகைப் போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி கட்டப்பட்டு வரும் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடக் கோரி, ஆலை முன் வருகிற 16-ஆம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்துவது என அனைத்துக் ... மேலும் பார்க்க