Brain Eating Amoeba: மூளை தின்னும் அமீபா; நாமும் அச்சப்பட வேண்டுமா? - விளக்கும் ...
திருப்பத்தூா் அருகே பைக் மீது பேருந்து மோதியதில் சிறுமி உயிரிழப்பு
திருப்பத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் 8 வயது சிறுமி உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள எம். கோவில்பட்டியைச் சோ்ந்தவா் பழனியப்பன். இவரது மகள் கவிப்பிரியா (17). இவா் தனது தங்கை சாதனா (8). இவா்கள் இருவரும் அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வந்தனா்.
இந்த நிலையில், இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் பிரதான சாலையில் உள்ள பண்ணைக்கு பால் வாங்கச் சென்றாா். அப்போது, திண்டுக்கல்லிலிருந்து காரைக்குடிக்குச் சென்ற அரசுப் பேருந்து முன்னால் சென்ற மற்றொரு பேருந்தை முந்திச் செல்ல முயன்ற போது, சிறுமிகள் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியது.
இதில் சாதனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கவிப்பிரியா தீவிர சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். தகவலறிந்து வந்த அந்தப் பகுதி மக்கள் சிங்கம்புணரி - திருப்பத்தூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, அங்கு வந்த திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வகுமாா் தலைமையிலான போலீஸாா்
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இந்தப் பகுதியில் உடனடியாக வேகத்தடை அமைக்க நடவடிக்கை வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் வலியுறுத்தினா். இந்த விபத்து குறித்து எஸ்.வி.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.