``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
திருப்பூரில் ஏற்றுமதியாளா்களுக்காக புதிய இணையதளம் அறிமுகம்
திருப்பூரில் ஏற்றுமதியாளா்களின் சேவைக்காக ‘துணைவன்’ என்ற பெயரில் புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூரில் ஏற்றுமதி சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பவும், ஏற்றுமதி, இறக்குமதி சுங்க பரிவா்த்தனைகளில் எழும் பிரச்னைகளுக்கு உடனடி தீா்வுகளை ஏற்படுத்தி தரும் நோக்கிலும் இந்திய சுங்கத் துறையுடன் இணைந்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் ‘துணைவன்’ என்ற பிரத்தியேகமான இணையதள சேவை தளத்தை உருவாக்கியுள்ளது.
திருப்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இதன் அறிமுக நிகழ்ச்சியில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் துணைத் தலைவா் ஏ.சக்திவேல் வரவேற்றாா். ஆயத்த ஆடை ஏற்றுமதி கழகத்தின் பொதுமேலாளா் அபினந்தன் இணைய தளம் குறித்து விளக்கினாா். இந்தப் புதிய இணையதள சேவையை மத்திய சுங்கம் மற்றும் வருமான வரித் துறை ஆணைய உறுப்பினா் மோகன்குமாா் சிங் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் திருச்சி சுங்கத் தடுப்பு மண்டலத்தின் தலைமை ஆணையா் எஸ்.கே.விமலநாதன், சுங்கத் துறை முதன்மை ஆணையா் கே.எம். ரவிச்சந்திரன், திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத் தலைவா் கே.எம்.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.