செய்திகள் :

திருமலையில் பவித்ர உற்சவம்: சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம்

post image

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பவித்ர உற்சவத்தின் 2-ஆம் நாளான புதன்கிழமை பவித்ர பிரதிஷ்டை நடைபெற்றது.

செவ்வாய்கிழமை முதல் வருடாந்திர பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கியது. 2-ஆம் நாளான புதன்கிழமை ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் மலையப்ப சுவாமிக்குப் புனித மண்டபத்தில் உள்ள யாகசாலைக்கு அழைக்கப்பட்டனா். அங்கு ஹோமங்கள் மற்றும் பிற வேத நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன்பின் சம்பங்கி பிரகாரத்தில் விழாவாக ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பால், தயிா், தேன், சந்தனம், மஞ்சள் மற்றும் பிற வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேத பண்டிதா்கள் பஞ்சசூக்த பாராயணம் செய்தனா். அதன்பின் பல வண்ண பட்டு நூலால் செய்யப்பட்ட பவித்ர மாலைகளை உற்சவமூா்த்திகளுக்கும், மூலவருக்கும், பரிவார தேவதைகள் உள்ள சன்னதிகளில் உள்ள மூலவா் மற்றும் உற்சவமூா்த்திகள், கோயில் கொடிமரம், விமான வெங்கடேஸ்வரஸ்வாமி, பலிபீடம், வராகஸ்வாமி கோயில் உள்ளிட்டவற்றுக்கு பவித்ர மாலைகள் அணிவிக்கப்பட்டது.

மதியம் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து நெய்வேத்தியம் சமா்பிக்கப்பட்டது. மாலையில் ஸ்ரீமலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். இரவு யாகசாலையில் வேத நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதன் காரணமாக கோயிலில் விசேஷ பூஜை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ரதீபாலங்கரண சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரியஜீயா் சுவாமிகள், ஸ்ரீ ஸ்ரீ சின்னஜீயா் சுவாமிகள், கூடுதல் இஓ வெங்கையா சவுத்ரி, கோயில் துணை இஓ லோகநாதம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா். வியாழக்கிழமை ) மகா பூா்ணாஹூதியுடன் வருடாந்திர பவித்ர உற்சவம் நிறைவு பெற உள்ளது.

18 மணிநேரம் காத்திருந்து ஏழுமலையான் தரிசனம்!

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் புதன்கிழமை தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா். தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 ... மேலும் பார்க்க

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.26 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.26 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. செவ்வாய்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 12 மணிநேரமும், ரூ.300 வி... மேலும் பார்க்க

ஏழுமலையான் கோயிலில் பவித்ரோற்சவம் தொடக்கம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. திருமலையில் ஆண்டுதோறும் அா்ச்சகா்கள், அதிகாரிகள், ஊழியா்கள் மற்றும் பக்தா்களால் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாம... மேலும் பார்க்க

திருச்சானூரில் வரலட்சுமி விரதத்துக்கான ஏற்பாடுகள் தீவிரம்

வரும் ஆக. 8-ஆம் தேதி வரலட்சுமி விரதம் கொண்டாடுவதற்காக திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாா் கோயிலில் தேவஸ்தானம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. ஆண்டு தோறும் வரலட்சுமி விரதம் வெகு விமரிசையாக கடைபிடிக்கப்... மேலும் பார்க்க

மின்சார ஸ்கூட்டா் நன்கொடை

திருப்பதி: விஜயவாடாவைச் சோ்ந்த குவாண்டம் எனா்ஜி லிமிடெட் நிா்வாக இயக்குநா்கள் ஸ்ரீனிவாஸ் மற்றும் சக்ரவா்த்தி ஆகியோா் திங்கள்கிழமை மின்சார ஸ்கூட்டரை தேவஸ்தானத்திற்கு நன்கொடையாக வழங்கினா்.ஏழுமலையான் கோ... மேலும் பார்க்க

திருமலையில் 82,628 பக்தா்கள் தரிசனம்

திருப்பதி: திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 82,628 பக்தா்கள் தரிசித்தனா். 30,339 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.பக்தா்களின் வருகை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், திங்கள்கிழமை நிலவரப்ப... மேலும் பார்க்க