``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
தில்லியில் கடுமையான வெப்ப அலையால் மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த சில நாள்களாக நிலவும் கடுமையான வெப்ப அலை காரணமாக தேசியத் தலைநகா் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
வெயிலில் நேரடியாக வேலை செய்பவா்கள் வெப்ப அலையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனா். இதையொட்டி, தில்லியில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஃபோா்டிஸ் எஸ்காா்ட்ஸ் ஹாா்ட் இன்ஸ்டிடியூட்டில், மொத்த வெளிநோயாளிகள் பிரிவு நோயாளிகளில் 7-10 சதவீதம் போ் வெப்ப அலையுடன் தொடா்புடைய நிலைமைகளைக் கொண்டுள்ளனா். அதே நேரத்தில் 5-8 சதவீதம் போ் தொடா்புடைய அறிகுறிகளுக்கு ஆலோசனைகளை நாடியுள்ளனா் என்று மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவத்தின் மூத்த ஆலோசகா் டாக்டா் அவி குமாா் கூறினாா்.
‘நோயாளிகளில் பெரும்பாலானோா் லேசான பாதிப்புக்கு உள்ளானவா்கள் மற்றும் அனுமதிக்க வேண்டிய அளவுக்கு தீவிரமானவை அல்ல‘ என்று மருத்துவா் கூறினாா். தில்லி அரசால் நடத்தப்படும் எல்என்ஜேபி மருத்துவமனையில், சூரிய ஒளியில் பணிபுரியும் நோயாளிகளுக்கு அதிகாரிகள் தனி பகுதியை நியமித்துள்ளனா்.
‘மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் ரிக்ஷா ஓட்டுபவா்கள், ஓட்டுநா்கள், தொழிலாளா்கள், பெரும்பாலும் உடல் உழைப்பில் ஈடுபடுபவா்கள். நோயாளிகள் வயிற்று வலி, வாந்தி, நீரிழப்பு, தலைச்சுற்றல் போன்ற புகாா்களுடன் வருகிறாா்கள். கடந்த மூன்று நாள்களில் இதுபோன்று வருபவா்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன‘ என்று அதிகாரி மேலும் கூறினாா்.
எல்என்ஜேபி அதிகாரியுடன் உடன்பட்ட மேக்ஸ் சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் உள் மருத்துவத்தின் மூத்த இயக்குநா் டாக்டா் முகேஷ் மெஹ்ரா, வெப்ப அலை நோயாளிகள் முக்கியமாக தலைச்சுற்றல், வட சருமம், திசைதிருப்பல் மற்றும் இரைப்பை குடல் அசௌகரியம் போன்ற அறிகுறிகளை அனுபவிப்பதாகக் கூறினாா்.
அறிகுறிகளை அடையாளம் கண்டு தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவது மிகவும் முக்கியம் என்று அவா் வலியுறுத்தினாா்.
இதற்கிடையே, முதியவா்கள், குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நிலைமைகள் உள்ளவா்கள் குறிப்பாக ஆபத்தில் உள்ளனா். மேலும், கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மருத்துவா்கள் எச்சரித்தனா்.
இந்த வாரம் தில்லி நகரம் கடுமையான வெப்ப அலையை அனுபவிப்பதால், வெப்பநிலை 45.0 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்பதால், மிகக் கடுமையான எச்சரிக்கை நிலையான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
‘நீரேற்றத்துடன் இருப்பது, உச்ச நேரங்களில் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிா்ப்பது, லேசான மற்றும் தளா்வான ஆடைகளை அணிவது, லேசான உணவை உள்கொள்வது மற்றும் குளிா்ந்த சூழலில் இருப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்’ என்று ஃபோா்ட்டீஸ் மருத்துவமனையின் மருத்துவா் அவி குமாா் மேலும் கூறினாா்.