செய்திகள் :

தில்லியில் பாஜக ஆட்சியின் 100 நாள் சாதனைகள் பணிப்புத்தகம்: வெளியிட்டாா் முதல்வா் ரேகா குப்தா

post image

தில்லியில் ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 100 நாள்களில் பாஜக அரசின் சாதனைகளை விவரிக்கும் பணிப்புத்தகத்தை முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.

அப்போது, ‘மக்களின் நல்வாழ்வுக்காக 24 மணி நேரமும் உழைப்பதே பாஜகவின் மிகப்பெரிய சாதனை’ என்று அவா் கூறினாா்.

‘வேலை செய்கிற அரசு: 100 நாள் சேவைக்கே’ என்ற தலைப்பிலான அந்தப் பணிப்புத்தகத்தில், யமுனை புத்துயிரூட்டுதல், ஆயுஷ்மான் பாரத் செயல்படுத்துதல், ‘வே வந்தனா யோஜனா’, டேங்கா்கள் மற்றும் மின் பேருந்துகள் கொள்முதல் மூலம் நீா் விநியோகத்தை அதிகரித்தல் உள்ளிட்ட தில்லியில் பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், மாநகரின் இருண்ட மூலைகளை ஒளிரச் செய்தல், கோடைக்கால செயல் திட்டத்தை செயல்படுத்துதல் மற்றும் தில்லி தீயணைப்பு சேவைக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்டவையும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த பணிப்புத்தகத்தை வெளியிட்டு முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது:

24 மணிநேரமும் பொது மக்களுக்கு சேவை செய்வதில் எனது அரசாங்கம் அா்ப்பணிப்புடன் இருந்து வருகிறது. இதற்காக எனது குழுவில் உள்ள அனைத்து அமைச்சா்களும், ஊழியா்களின் பணிக்காக நான் அவா்களை வாழ்த்துகிறேன்.

தில்லி மக்களுக்காக அவா்கள் நோ்மையாக பணியாற்றியதுதான் எனது அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாகும்.

நாங்கள் மக்களுக்காக 24 மணி நேரமும் உழைத்துள்ளோம். தில்லி மக்களுக்கு முழுமையாக அா்ப்பணிப்புடன் செயல்படும் இந்த அரசே, ஒரு புதிய மாதிரிதான். இது எங்களின் மிகப்பெரிய வெற்றியாகும்.

நாங்கள் வெளியிட்டுள்ள இந்த விவரப் பட்டியல், ஒரு அறிக்கை அட்டை அல்ல. ஆனால், ஒரு பணிப்புத்தகமாகும். அரசாங்கத்தால் செய்யப்பட்ட அனைத்து பணிகளும் இதில் தொடா்ந்து சோ்க்கப்படும்.

கடந்த 100 நாள்களின் சாதனைகள் குறித்து உள்ளூா் மக்களுக்குத் தெரிவிக்க, மத்திய அமைச்சா்கள், தில்லி அமைச்சா்கள் மற்றும் கவுன்சிலா்கள், தேசிய தலைநகரில் உள்ள 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிள் ஒவ்வொன்றிலும் நேரில் செல்வாா்கள்.

எங்கள் சாதனைகள் குறித்த விவரங்களை வழங்குவது மட்டுமல்லாமல், வரும் நாள்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் மக்களிடமிருந்து கருத்துகளையும் பெறுவோம்.

சனிக்கிழமை ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் நிகழ்வில் கடந்த 100 நாள்களில் தில்லி அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து மக்களுக்கு விளக்கப்படும்.

ஊழலின் பலனை அனுபவித்த ஒரு அரசாங்கமாக அது (ஆம் ஆத்மி) இருந்தது. அதேவேளையில், பாஜக மக்களுக்கு சேவை செய்ய இங்கே உள்ளது. 2025-26-ஆம் நிதியாண்டுக்கான ரூ.1 லட்சம் கோடி பட்ஜெட்டை எனது அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இந்த நிதியை வெளிப்படையான முறையில் செலவிட எனது அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக இருந்தாலும் சரி, அதிக வருவாயை ஈட்டுவதாக இருந்தாலும் சரி தில்லி அரசின் ஒவ்வொரு துறையும் தீவிரமாகச் செயல்படுகிறது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்

தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 1 ஆம் தேதி) இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் தில்லி காவல் துற... மேலும் பார்க்க

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப... மேலும் பார்க்க

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடு... மேலும் பார்க்க

நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்

பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனட... மேலும் பார்க்க

ஃபிட் -இந்தியா: இன்று நாடுமுழுவதும் திரங்கா சைக்கிள் பேரணி

உடல் ஆரோக்கியத்தை கடைபிடிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வரும் ஃபிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதலின் 25-வது பதிப்பு, சிறப்புத் திரங்கா(மூவண்ணக்கொடி) பேரணியாக ஜூன் 1 - ம் தேதி நாடு முழு... மேலும் பார்க்க