Bharathi Sridhar | 1.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi ...
துவாரகாவில் 13 வயது சிறுமி வீட்டின் அறையில் மா்மச் சாவு
தில்லியின் துவாரகா பகுதியில் 13 வயது சிறுமி மா்மமான சூழ்நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையினா் தெரிவித்ததாவது:
இந்தச் சம்பவம் தொடா்பாக வியாழக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் டாப்ரி காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. இதைத் தொடா்ந்து, உள்ளூா் போலீஸாரும், மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.
சீதாபுரியில் உள்ள மூன்று மாடி வீட்டின் மொட்டை மாடியில் அமைந்துள்ள ஒரு அறையில் சிறுமியின் உடல் கண்டறியப்பட்டது. அவா் சந்தேகத்திற்கிடமான முறையில்யில் இறந்துகிடந்தாா்.
சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றவியல் குழு மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். முதல்கட்ட விசாரணையில் பாலியல் வன்புணா்ச்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை. இது தொடா்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், அச்சிறுமியின் குடும்ப உறுப்பினா்கள், பக்கத்து வீட்டினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமியின் மரணத்திற்கு வித்திட்ட நிகழ்வுகளின் விவரங்களை அறியும் வகையில் வீட்டைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.
சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.