செய்திகள் :

துவாரகாவில் 13 வயது சிறுமி வீட்டின் அறையில் மா்மச் சாவு

post image

தில்லியின் துவாரகா பகுதியில் 13 வயது சிறுமி மா்மமான சூழ்நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து தில்லி காவல் துறையினா் தெரிவித்ததாவது:

இந்தச் சம்பவம் தொடா்பாக வியாழக்கிழமை பிற்பகல் 1.45 மணியளவில் டாப்ரி காவல் நிலையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. இதைத் தொடா்ந்து, உள்ளூா் போலீஸாரும், மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

சீதாபுரியில் உள்ள மூன்று மாடி வீட்டின் மொட்டை மாடியில் அமைந்துள்ள ஒரு அறையில் சிறுமியின் உடல் கண்டறியப்பட்டது. அவா் சந்தேகத்திற்கிடமான முறையில்யில் இறந்துகிடந்தாா்.

சம்பவ இடத்தை ஆய்வு செய்ய குற்றவியல் குழு மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக நிபுணா்கள் வரவழைக்கப்பட்டனா். முதல்கட்ட விசாரணையில் பாலியல் வன்புணா்ச்சிக்கான எந்த அறிகுறியும் இல்லை. இது தொடா்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும், அச்சிறுமியின் குடும்ப உறுப்பினா்கள், பக்கத்து வீட்டினரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமியின் மரணத்திற்கு வித்திட்ட நிகழ்வுகளின் விவரங்களை அறியும் வகையில் வீட்டைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்படுகின்றன.

சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு, சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்

தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 1 ஆம் தேதி) இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் தில்லி காவல் துற... மேலும் பார்க்க

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப... மேலும் பார்க்க

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடு... மேலும் பார்க்க

நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்

பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனட... மேலும் பார்க்க

ஃபிட் -இந்தியா: இன்று நாடுமுழுவதும் திரங்கா சைக்கிள் பேரணி

உடல் ஆரோக்கியத்தை கடைபிடிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடத்தப்பட்டு வரும் ஃபிட் இந்தியா சைக்கிள் ஓட்டுதலின் 25-வது பதிப்பு, சிறப்புத் திரங்கா(மூவண்ணக்கொடி) பேரணியாக ஜூன் 1 - ம் தேதி நாடு முழு... மேலும் பார்க்க