செய்திகள் :

தூத்துக்குடி: அகற்றப்படாத ஆக்கிரமிப்பால் விபத்து; பைக் மீது லாரி மோதியதில் சிறுமிக்கு நேர்ந்த சோகம்

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரைச் சேர்ந்தவர் பரமசிவம்‌. இவர் வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் அவரது வீட்டிற்கு மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் உள்ள அவரது உறவினரான ஜெயபாண்டி என்பவரின் மனைவி வெண்ணிலா, அவரது மகள்கள் ஏஞ்சல் ஆராதியா, ஆசினியா ஆகியோர் கடந்த 22-ம் தேதி வந்துள்ளனர்.

இந்த நிலையில், அவர்களை மீண்டும் டி.கல்லுப்பட்டியிலுள்ள அவர்களது வீட்டில் விடுவதற்காக வழக்கறிஞர் பரமசிவம், மூன்று பேரையும் தனது பைக்கில் அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

பைம் மீது மோதிய டேங்கர் லாரி
பைம் மீது மோதிய டேங்கர் லாரி

கோவில்பட்டி - பசுவந்தனை சாலையில் வந்து கொண்டிருந்த போது பின்னால் வந்த டேங்கர் லாரி பைக் மீது மோதியது. இதில் 9 வயதான சிறுமி ஏஞ்சல் ஆராதியா டேங்கர் லாரிக்குள் விழுந்து விட்டார்.

லாரியின் டயர் ஏறி சிறுமி தலை நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பரமசிவம், வெண்ணிலா, அவரது இளைய மகள் ஆசினியா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், உயிரிழந்த சிறுமியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்து தொடர்பாக டேங்கர் லாரியின் டிரைவர் சிவந்திபட்டியைச் சேர்ந்த ஆறுமுகச்சாமி என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியின் உடலை மீட்ட போலீஸார்

இந்த விபத்து குறித்து சமூக ஆர்வலர்கள் பேசும்போது, ”பசுவந்தனை சாலை பகுதியில் சாலையின் இரு புறமும் ஆக்கிரமிப்புக்கள் அதிகமாக இருப்பது மட்டுமின்றி, சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை.

ஆக்கிரமிப்புகளால் போதிய இடைவெளி இல்லாததால்தான் பைக் மீது டேங்கர் லாரி மோதி சிறுமி உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது” என்கிறார்கள்.  

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய... மேலும் பார்க்க

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க