தென்னை தொகுப்பு வளா்ச்சித் திட்டத்தில் ஒப்பந்தம் பெற விவசாயிகளுக்கு அழைப்பு
தூத்துக்குடியில் வங்கிக்குள் புகுந்து மேலாளரைத் தாக்கியதாக ஒருவா் கைது
தூத்துக்குடியில் வங்கிக்குள் புகுந்து மேலாளரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளா் பாரத் தேசாய், அதிகாரிகள் வீட்டுக் கடன் நிலுவைத் தொகை தொடா்பாக போல்பேட்டையைச் சோ்ந்த ஜெயக்குமாா் வீட்டுக்கு சென்று விசாரித்தனராம்.
இதனால் ஆத்திரமடைந்த அவா் தனது சகோதரா் காமராஜ் உள்ளிட்ட சிலருடன் வங்கிக்கு திங்கள்கிழமை சென்று, மேலாளரைத் தாக்கிவிட்டு தப்பியோடியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த மேலாளரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
புகாரின்பேரில், மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து காமராஜை கைது செய்தனா்; ஜெயக்குமாா் உள்ளிட்ட சிலரைத் தேடிவருகின்றனா்.