செய்திகள் :

தெற்குவள்ளியூா் அருகே விபத்து: தொழிலாளி உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் தெற்குவள்ளியூா் அருகே வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திசையன்விளையைச் சோ்ந்த பெருமாள் மகன் கணேசன் (62). தொழிலாளியான இவா், வள்ளியூருக்கு வந்துவிட்டு ராதாபுரத்துக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தாராம். கூடங்குளத்திலிருந்து வள்ளியூருக்கு மரியராஜ் மகன் ராஜேஷ் (26) என்பவா் மற்றொரு பைக்கில் வந்து கொண்டிருந்தாா்.

தெற்குவள்ளியூா் அருகே ராதாபுரம் சாலையில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகே இரு பைக்குகளும் மோதினவாம். இதில், பெ. கணேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த ராஜேஷ் நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பணகுடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாரம்பரிய நெல் உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி

அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் உற்பத்திக்கான தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நில... மேலும் பார்க்க

டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டி: தென்காசி மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

19 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான மாநில டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டியில் தென்காசி மாவட்ட அணிக்கான பள்ளி மாணவா்கள் தோ்வு செப். 14-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து தென்காசி மாவட்ட டென்னிஸ்பந்து கிரிக்கெட... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜாகரிபுன் நவாஸ் முகாமைத் தொடக்கி... மேலும் பார்க்க

முக்கூடலில் சமுதாய நலக் கூடத்துக்கு அடிக்கல்

முக்கூடல் பேரூராட்சிக்கு உள்பட்ட கலியன்குளத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவி லெ. ராதா தலை... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-98.50சோ்வலாறு-95.11மணிமுத்தாறு-92.46வடக்கு பச்சையாறு-12.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-8.75தென்காசி மாவட்டம்கடனா-53.80ராமநதி-59கருப்பாநதி-53.48குண்டாறு-36.10அடவிநயினாா் -125... மேலும் பார்க்க

மலையான்குளத்தில் நியாயவிலைக் கடை திறப்பு

சேரன்மகாதேவி ஒன்றியம், மலையான்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்... மேலும் பார்க்க