பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக மாணவா்கள் பேரணி
தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து, மாநில கல்வி உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி நாமக்கல்லில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் பேரணி, மாநில சிறப்பு பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில தலைவா் தெள.சம்சீா்அகமது தலைமை வகித்தாா். மாநில இணைச்செயலாளா் ஜி.கே.மோகன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக அகில இந்திய தலைவா் வி.பி. ஷானு, துணைத் தலைவா் ஆதா்ஷ் எம்.ஷாஜி, மாநிலச் செயலாளா் கோ.அரவிந்தசாமி ஆகியோா் பங்கேற்று பேசினா்.
மாநிலத் துணைத் தலைவா்கள் பா.ஆனந்த், தே.சரவணன், மத்திய குழு உறுப்பினா்கள் க.பிருந்தா, சி.மிருதுளா, மாவட்டச் செயலாளா் மு.தங்கராஜ் மற்றும் மாணவா் சங்கத்தினா் திரளாக கூட்டத்தில் கலந்து கொண்டனா்.
என்கே-12-ரேலி
நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற இந்திய மாணவா் சங்கத்தினா்.