செய்திகள் :

தைவானை உலுக்கிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையா?

post image

தைவான் நாட்டின் கடற்கரை நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைவானின் ஹுவாலியன் நகரத்தில் இன்று (ஜூன் 11) மாலை 4.30 மணியளவில், நிலப்பரப்பிலிருந்து சுமார் 31.1 கி.மீ. ஆழத்தில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால், அந்நாட்டில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியதாக தைவானின் மத்திய வானிலை அதிகாரம் கூறியுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் கடற்கரை நகரத்தின் அருகில் பதிவாகியுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலநடுக்கம், அந்நாட்டிலுள்ள கட்டடங்களை சுமார் 1 நிமிடத்துக்கும் மேல் உலுக்கியதாகக் கூறப்படும் நிலையில், பாதிப்புகள் குறித்து எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக, தைவான் நாடு, பசிபிக் பெருங்கடலின் ரிங் ஆஃப் ஃபையர் எனப்படும் டெக்டானிக் பிளவுக்கோடுகளின் மீது அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்தப் பிளவுக்கோட்டின் மீதுள்ள நிலப்பகுதிகள் நிலநடுக்கம் அபாயமுள்ளவை எனக் கூறப்படுகிறது.

கடந்த 1999-ம் ஆண்டு தைவானில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டடங்கள் இடிந்தன. மேலும், சுமார் 2,415 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பிகினி ஆடைகளுக்கு தடை! ஆண்களுக்கும் மேலாடை கட்டாயம் - எங்கே?

தென் ஆப்பிரிக்க வெள்ளம்: உயிரிழப்பு 57-ஆக உயா்வு

தென் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 57-ஆக உயா்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பாா்வையிடுவதற்காக வியாழக்கிழமை வந்த மத்திய அமைச்சா் வெலென்கோசினி லாபிசா இ... மேலும் பார்க்க

3 ஆண்டுகாலப் போர்! ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் பலி !

ரஷிய வீரர்கள் 10 லட்சம் பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது.நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தததை எதிர்த்த ரஷியா, உக்ரைனுக்கு எதிராக போரில் ஈடுபட்டது. இரு நாடுகளுக்கும் இடையேயான போரை நி... மேலும் பார்க்க

லாஸ் ஏஞ்சலீஸ் மக்கள் போராட்டம்: 400 பேர் கைது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கடுமையான குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக, லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாடுகளிலிருந்து அமெரிக்... மேலும் பார்க்க

ஹவாய்: 6 மாதங்களில் 25 முறை வெடித்த எரிமலை!

அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிலாயூயா எரிமலை கடந்த 6 மாதங்களில் 25வது முறையாக வெடித்து சீற்றமடைந்துள்ளது. உலகில் அதிக சீற்றமுடைய எரிமலைகளில் ஒன்றான, ஹவாய் பெரிய தீவில் அமைந்துள்ள கிலாயூயா எரிமலை, நேற... மேலும் பார்க்க

அமெரிக்காவில் காட்டுத் தீ! 700 குடும்பங்கள் வெளியேற்றம்!

அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயால், அப்பகுதிகளில் வசித்த சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஓரிகனின் கொலம்பியா ஆற்று கனவாய... மேலும் பார்க்க

50 போட்டிக் குழுவினரைக் கொன்ற ஹமாஸ்

காஸாவில் இஸ்ரேல் உதவியுடன் தங்களுக்கு எதிராகச் செயல்படும் அபு ஷபாப் குழுவைச் சோ்ந்த 50 பேரை ஹமாஸ் படையினா் கொன்றுள்ளனா். இது குறித்து அபு ஷபாப் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது... மேலும் பார்க்க