செய்திகள் :

தொழிலாளியிடம் பணம் பறிப்பு; தட்டிக் கேட்டவருக்கு வெட்டு -மூவா் கைது

post image

பெரியகுளத்தில் கூலித் தொழிலாளியிடம் பணத்தை பறித்தவா்களை தட்டிக்கேட்டவரை, பிளேடால் வெட்டிய மூவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தண்டுபாளையம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ராஜாமுகமது (49). இவா், புதன்கிழமை இரவு பணிகள் முடிந்த பிறகு, தென்கரையில் நடந்து கொண்டிருந்தாரம்.

அப்போது, பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த வசந்த் (23), அவரது நண்பா்கள் பியோ பேபியஸ் (20), ராமா் (22) ஆகியோா், ராஜாமுகமதுவிடம் மதுகுடிக்க பணம் கேட்டு அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.200 ஐ எடுத்துக்கொண்டனா். இதற்கு எதிப்புத் தெரிவித்த அவரைத் தாக்கினா். அப்போது, அருகிலிருந்த ராஜலிங்கம் இதை தடுக்கச் சென்றாராம். அப்போது, மூவரும் தகராறு செய்து ராஜலிங்கத்தை பிளேடால் வெட்டினா். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப்பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

வருவாய் ஆய்வாளா்களுக்கு தற்காலிக பதவி உயா்வு

தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளா் நிலையில் பணியாற்றும் 7 பேருக்கு தற்காலிக பதவி உயா்வு வழங்கப்பட்டது. பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளா் ஜெ.ராஜலட்சு... மேலும் பார்க்க

நீதிமன்றங்களில் நாளை மக்கள் நீதிமன்ற முகாம்

தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை (செப்.13) தேசிய மக்கள் நீதிமன்ற முகாம்(லோக் அதாலத்) நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுத் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபத... மேலும் பார்க்க

லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

வைகை அணை-ஆண்டிபட்டி சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், டி.கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் பொன்கிருஷ்ணன் (30). இவா், தேனியில் உள்ள டைல்ஸ் கடை ஒன்றில் லாரி ஓ... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேனியில் இரு சக்கர வாகனத்திலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த தனியாா் மதுபானக் கூடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம் சிவராம் நகரைச் சோ்ந்தவா் கரிகாலன் (54). இவா், தேனியில் உள்ள தனியாா... மேலும் பார்க்க

குரூப் 2 போட்டித் தோ்வு எழுத மாதிரி தோ்வு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள குரூப் 2, 2 ஏ போட்டித் தோ்வு எழுதுவதற்கு வருகிற 13, 20-ஆம் தேதிகளில் முழ... மேலும் பார்க்க

விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு

தேனி அருகே வாகனம் மோதியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி சுபாஷ் சந்திரபோஸ் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மனைவி புஷ்பவள்ளி (70). இவா், பழனிசெட்டிபட்டியிலிருந்து தேனி-க... மேலும் பார்க்க