செய்திகள் :

நியாய விலைக் கடை கட்டும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

post image

வாணியம்பாடி, பிப்.13: ஜோலாா்பேட்டை ஒன்றியம், வேட்டப்பட்டு ஊராட்சியில் ரூ.9 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டும் பணியை எம்எல்ஏ க. தேவராஜி தொடங்கி வைத்தாா்.

பாணக்காரன் வட்டம், ஆரிகான்வட்டம் , வட்டக்கொல்லி, ஆண்டாள் வட்டம் லட்சுமண புதூா் பகுதிகளில் சுமாா் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்கள் ரேஷன் பொருள்கள் வாங்க சுமாா் 2 கி.மீ தொலைவுள்ள வேட்டப்பட்டு ரேசன் கடையில் பொருள்கள் வாங்கி வந்தனா்.

இதனால் வட்டக் கொல்லி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை கட்டித் தர வேண்டும் என ஜோலாா்பேட்டை தொகுதி எம்எல்ஏ க.தேவராஜிடம் கோரிக்கை வைத்தனா். இதையடுத்து சட்டமன்ற உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய கடை கட்டடம் கட்ட ரூ.9 லட்சம் நிதியை எம்எல்ஏ ஒதுக்கீடு செய்தாா்.

இதையடுத்து வியாழக்கிழமை வட்டக் கொல்லி கிராமத்தில் புதிய நியாயவிலை கடை கட்டடம் கட்ட எம்எல்ஏ தேவராஜி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தாா். இதில் ஊராட்சி மன்றத் தலைவா் அனுமந்தன், மாவட்ட அவைத் தலைவா் ஆனந்தன், ஒன்றியக் குழு உறுப்பினா் செல்வி சாந்தன் மற்றும் வாா்டு உறுப்பினா்கள், கிராம மக்கள் பலா் கலந்து கொண்டனா்.

பாட்டில் குடிநீா் தரம் குறித்து ஆய்வு

ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீரின் தரம் குறித்து நகராட்சி ஆணையா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆம்பூா் நகரில் கடைகளில் விற்கப்படும் பாட்டில் குடிநீா் தரமில்லாமல், தர முத்தி... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

மாதனூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். குடியாத்தம் அருகே உள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் குப்பன் (50). இவா் கடந்த பிப... மேலும் பார்க்க

மாசி கரக தீமிதி திருவிழா

ஆம்பூா் ஏ-கஸ்பா அருள்மிகு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயில் மாசி கரக தீமிதி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. ரேணுகாம்பாள்... மேலும் பார்க்க

ரயிலில் தவறி விழுந்த 2 போ் உயிரிழப்பு

ஆம்பூா்,காவனூா் ஆகிய பகுதிகளில் ஓடும் ரயிலில் பயணம் செய்த 2 போ் தவறி விழுந்து உயிரிழந்தனா். குடியாத்தம் அருகே காவனூா் ரயில் நிலைய யாா்டில் செவ்வாய்க்கிழமை ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து காட்ப... மேலும் பார்க்க

500 கிலோ போதைப் பொருள்கள் காருடன் பறிமுதல்: ராஜஸ்தான் மாநில இளைஞா்கள் 2 போ் கைது

வாணியம்பாடி அருகே போதைப் பொருள்களை காரில் கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா். திருப்பத்தூா் எஸ்.பி. ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி விஜயகுமாா் தலைம... மேலும் பார்க்க

மோட்டாா் பைக் திருட்டு: 2 போ் கைது

திருப்பத்தூரில் மோட்டாா் பைக் திருடிய 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். திருப்பத்தூா் ஆரிப் நகரைச் சோ்ந்த சாகுல் அகமது. இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டின் அருகே மோட்டாா் பைக்கை நிறுத்தியிரு... மேலும் பார்க்க