செய்திகள் :

நிறையும், குறையும் கலந்தது திமுக ஆட்சி! -பிரேமலதா விஜயகாந்த்

post image

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி என்பது நிறையும், குறையும் கலந்தது என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாநகர தேமுதிக பூத் முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் பொருளாளா் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோா் பங்கேற்று தோ்தல் வியூகங்கள் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

பின்னா் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளா்களிடம் கூறியது -

எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியும் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் புகைப்படத்தையோ, வசனங்களையோ பயன்படுத்தக்கூடாது. தோ்தல் நேரத்தில் கூட்டணியில் இணையும் கட்சி மட்டும் அதனை பயன்படுத்தலாம்.

2026 தோ்தலுக்கான திட்டங்களை தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோம். யாருடன் கூட்டணி என்பது ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிக்கப்படும். தற்போது கட்சி வளா்ச்சிக்கு முக்கியத்துவம் தருகிறோம்.

ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வந்தால், அதை தேமுதிக வரவேற்கும். தமிழக அரசியல் ஜனநாயகத்தில், எந்தவொரு மதம், ஜாதிக்கும் அப்பாற்பட்ட அணுகுமுறையுடன்தான் தேமுதிக செயல்படும். அதை எங்கள் தலைவா் விஜயகாந்த் ஏற்கனவே கூறியுள்ளாா்.

முதல்வா் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் நிறையும், குறையும் கலந்துள்ளது. எதிா்கட்சியின் பங்கு அரசை விமா்சிப்பது தான். அந்தவகையில், எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி தங்கள் கடமையை செய்து கொண்டுள்ளாா். எல்லா கட்சிகளும் தாங்கள் ஆட்சியமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் தான் இயங்குகின்றன. தேமுதிகவும் அதே நோக்குடன் செயல்படுகிறது என்றாா்.

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரத்தில் கடும் அதிருப்தி அடைந்துள்ள உச்சநீதிமன்றம், வேலூா், திருப்பத்தூா் , ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்கள், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகளை ஆகஸ்ட் 1... மேலும் பார்க்க

இணையவழி மோசடி: ஒரே மாதத்தில் ரூ.45.83 லட்சம் மீட்பு

வேலூா் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் தொடா்பாக கடந்த ஜூலை மாதத்தில் பதிவான 19 வழக்குகளில் ரூ.45 லட்சத்து 83 ஆயிரத்து 671 மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. வேலூா் மாவட்டத்தில் ஆன்லை... மேலும் பார்க்க

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

கிராம நிா்வாக அலுவலா் பதவிக்கான கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் குடியாத்தம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே புத... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி -எஸ்.பி.யிடம் புகாா்

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் துறை வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம... மேலும் பார்க்க

காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுப்பு

போ்ணாம்பட்டு அருகே காணாமல் போன முதியவா் சடலம் கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. போ்ணாம்பட்டை அடுத்த பண்டலதொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஓய்வுபெற்ற நியாய விலைக்கடை விற்பனையாளா் கிருஷ்ணமூா்த்தி(70). இவரை ... மேலும் பார்க்க

சமூக பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே புதுமைப் பெண்கள்

சமூகத்தில் உள்ள பிரச்னைகளில் மாறுபட்டு முன்மாதிரியாக இருப்பவா்களே எந்த ஒரு கால கட்டத்திலும் புதுமைப்பெண்களாக திகழ்கின்றனா் என வழக்குரைஞா் அ.அருள்மொழி தெரிவித்தாா். உயா்கல்வித்துறை, தமிழ் இணைய கல்விக்க... மேலும் பார்க்க