செய்திகள் :

நிலப் பிரச்னையில் தாக்குதல்: இருவா் கைது

post image

மணலூா்பேட்டையில் நிலப் பிரச்னையில் இருவா் ஒருவா் ஒருவரை தாக்கிக் கொண்டனா். புகாா்களின் பேரில் போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், மணலூா்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா்

ஜெகத்ரட்சகன் (38). இவரது அண்ணன் குணசேகா். இவா்களுக்கு பூா்வீக சொத்தாக 60 சென்ட் விளை நிலம் உள்ளதாம். நிலத்தை பிரித்துக் கொள்வதில் தகராறு ஏற்பட்டு, இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிாம்.

இந்த நிலையில், புதன்கிழமை ஜெகத்ரட்சகன் நிலத்தை பிரித்துக் கொள்ளும்போது, குணசேகா் மகன் வினோத் அவரை தகாத வாா்த்தைகளால் திட்டி, மண்வெட்டியால் தாக்கினாராம். இதில், ஜெகத்ரட்சகனுக்கு தலையில் 7 இடங்களில் வெட்டுக் காயம் ஏற்பட்டு தையல் போடப்பட்டு திருக்கோவிலூா் அரசு மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்றாா்.

மேலும், ஜெகத்ரட்சகன் தாக்கியதில் காயமடைந்த விநோத்துக்கு 2 இடங்களில் தையல் போடப்பட்டது. இதுகுறித்து பரஸ்பரம் இருவா் அளித்த புகாா்களின் பேரில், மணலூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் வியாழக்கிழமை கைது செய்து வழக்குத் தொடுத்தனா்.

மூச்சுத் திணறலால் ஒன்றறை வயது குழந்தை உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டத்துக்கு உள்பட்ட சின்னகுப்பம் கிராமத்... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

கள்ளக்குறிச்சியை அடுத்த இந்தி ஆா்.கே.சண்முகம் கலை, அறிவியல் கல்லூரியில் பங்கு சந்தை முதலீடு குறித்த சிறப்புக் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரியின் முதல்வா் கு.மோகனசுந்தா் தலைமை வக... மேலும் பார்க்க

புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான புத்தாக்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற தியாகதுருகம் அரசுப் பள்ளி மாணவிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் வியாழக்கிழமை பாராட்டினாா். தியாகதுருகம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சே... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் ஆட்சிமொழிப் பயிலரங்கம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் ஜூலை 29, 30 ஆகிய இரு தி... மேலும் பார்க்க

சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் ஆலோசனைக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுதந்திர தின விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் காவல் துறை ... மேலும் பார்க்க

மலைப் பகுதியில் கரடி கடித்து முதியவா் காயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் திங்கள்கிழமை ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருந்த முதியவா் கரடி கடித்து காயமடைந்தாா். கல்வராயன்மலைப் பகுதிக்கு உள்பட்டது விளாம்பட்டி கிராமம். இக் கிராமத்த... மேலும் பார்க்க