செய்திகள் :

நெய், சோப்பு, தின்பண்டங்கள் விலை குறைகிறதா? ஜிஎஸ்டி குறைக்கப்பட்டால்..?!

post image

நெய், சோப்பு போன்ற அத்தியாவசிய பொருள்கள் மீதான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்றாட அத்தியாவசிய பொருள்கள் மீதுள்ள வரியைக் குறைத்து பொதுமக்களின் வரிச்சுமையைக் குறைக்கவும், அவற்றின் மீதான வரியை மறுபரிசீலனை செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் மிகக் குறைந்த அளவிலான வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு நற்செய்தியாகவும், அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், அத்தியாவசிய பொருள்களின் சரக்கு மற்றும் சேவை வரியின் நிலைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, சில அத்தியாவசியப் பொருள்கள் 5 முதல் 12 சதவிகித நிலைகளில் வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒருவேளை இந்த அளவு மாற்றம் செய்யப்பட்டு விகிதம் குறைக்கப்படலாம், அல்லது முற்றிலுமாக நீக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதில், விகிதம் குறைக்கப்படுவதால் பொருள்கள் மலிவு விலையில் கிடைக்கும்.

ஜிஎஸ்டியின் 56-வது கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கப்படும் எனக் கருதப்படுகிறது. மேலும், அரசு மரபுமுறையின்படி கூட்டம் நடைபெறுவதற்கு 15 நாள்களுக்கு முன்னதாக அறிவிக்கப்பட வேண்டும். இந்த மாத இறுதியில் இதன் தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அறிவிப்புகள் அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும், ஒரு சில மாநிலங்களில் அடுத்தாண்டு நடைபெறும் பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாக மக்களின் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர உதவும்.

மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில நிதியமைச்சர்கள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில், வரிவிகிதங்களின் மாற்றங்களைக் கொண்டுவர பரிந்துரைப்பார்கள்.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், 2017 ஆம் ஆண்டு பொருள்கள் மீதான மறைமுக வரி விதிக்கப்பட்டதற்கு பின்னர், ஜிஎஸ்டி விகிதங்களில் செய்யப்பட்ட முக்கிய மாற்றங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

In what could bring major relief to middle- and lower-income households, the central government is seriously considering a restructuring of the Goods and Services Tax (GST) slabs

இதையும் படிக்க... 20 நிமிடங்களில் அதிவேக சார்ஜிங்..! டாடா ஹாரியர் இவி!

புதிய குற்றவியல் சட்டங்கள் அமலாக்கம் வீணானது: ப.சிதம்பரம்

புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தியது வீணான நடவடிக்கை என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ப.சிதம்பரம் விமா்சித்தாா். சுதந்திர இந்தியாவில் மூன்று புதிய குற்றவியல் ... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க சோனியா, ராகுல் முயற்சி’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை அபகரிக்க காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தி, மக்களவை எதிா்க்கட்சித் தலைவரும் அக்கட்சி எம்.பி.யுமான ராகுல் காந்தி ஆகியோா் விரும்பியதாக தில்... மேலும் பார்க்க

மைக்ரோசாஃப்ட்டில் 9,000 பேர் வேலையிலிருந்து நீக்கம்! ஏ.ஐ. பிரிவில் அதிக முதலீடு எதிரொலி!!

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. கடந்த மே மாதம் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையின்போது 6,000 போ் வரை வெளியேற்றப்பட்... மேலும் பார்க்க

வாடகைக் காா்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிக்க அனுமதி - மத்திய அரசு

வாடகைக் காா் நிறுவனங்கள் இனி தேவை அதிகமுள்ள காலை, மாலை (பீக் ஹவா்) நேரங்களில் அடிப்படை கட்டணத்தைவிட இரு மடங்கு வரை கூடுதலாக கட்டணம் வசூலித்துக் கொள்ள மத்திய அரசு அனுமதித்துள்ளது. முன்னதாக, இத்தகைய தேவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். 1955-... மேலும் பார்க்க

அமா்நாத் யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து புறப்பட்டது முதல் குழு

ஜம்மு-காஷ்மீரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமா்நாத் யாத்திரை வியாழக்கிழமை (ஜூலை 3) தொடங்கவுள்ளது. இதையொட்டி, ஜம்மு முகாமில் இருந்து காஷ்மீரில் உள்ள இரு அடிவார முகாம்களுக்கு 5,892 பேருடன் முதலா... மேலும் பார்க்க