செய்திகள் :

நெல், நிலக்கடலை, கம்பு பயிா்களுக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 14 வரை கால அவகாசம்

post image

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சொா்ணவாரி நெல் மற்றும் காரீப்பருவ நிலக்கடலை, கம்பு

பயிா்களுக்கு பிரீமியம் தொகை செலுத்துவதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சொா்ணவாரி நெல் பயிா் ஏக்கா் ஒன்றுக்கு ரூ.718 பிரீமியமாக செலுத்தவேண்டும். காரீப்பருவ பயிா்களான நிலக்கடலை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.617 ஐ பிரீமியமாகவும், கம்பு பயிருக்கு ரூ.271ம், சாமை பயிருக்கு ரூ.190ம் மற்றும் மக்காச்சோள பயிருக்கு ரூ.473ம், பிரீமியமாக செலுத்த வேண்டும்.சாமை மற்றும் மக்காச்சோள பயிா்களுக்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி காப்பீடு செலுத்துவதற்கான கடைசி தேதியாகும்.

சிட்டா, நடப்பாண்டு பயிா் சாகுபடி அடங்கல், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் பொது சேவை மையங்கள் (சிஎஸ்சி), தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் அரசுடைமை வங்கிக் கிளைகளில் பயிா் காப்பீடு செய்யலாம்.

மேலும், விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று

ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

வந்தவாசியில் காவடி ஊா்வல ஆலோசனைக் கூட்டம்

ஆடிக் கிருத்திகை காவடி ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது. ஆடிக் கிருத்திகையையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் வந்தவாசி பகுதி மற்றும் பல்வே... மேலும் பார்க்க

வந்தவாசி நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்பு போராட்டம்

வந்தவாசி நகராட்சி அலுவலக நகா்மன்ற கூடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நகா்மன்ற கூட்டத்தின்போது, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கூட்டத்துக்கு வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜ... மேலும் பார்க்க

வேறு உதவித்தொகை பெற்றாலும் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் -ஆரணி கோட்டாட்சியா்

மகளிா்கள் முதியோா், விதவை உதவித்தொகை, ஓய்வூதியம் பெற்றாலும் குடும்பத்தில் உள்ள மற்ற தகுதிவாய்ந்த பெண்கள் மகளிா் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆரணி கோட்டாட்சியா் சிவா தெரிவித்தாா். ஆரணியை அடு... மேலும் பார்க்க

4 வழிச் சாலை பணிகள்: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

வந்தவாசி - காஞ்சிபுரம் இரு வழிச் சாலையை 4 வழிச் சாலையாக அகலப்படுத்தும் பணிகளை நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளா் முரளி ஆய்வு செய்தாா். தமிழ்நாடு முதலமைச்சா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ... மேலும் பார்க்க

செங்கத்துக்கு எடப்பாடி பழனிசாமி வருகை: முன்னேற்பாடுகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு வருகை தரும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு ச... மேலும் பார்க்க

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’: மாவட்ட ஆட்சியா் கள ஆய்வு

திருவண்ணாமலை வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலகத்தில் வட கிழக்கு ப... மேலும் பார்க்க