நெல்லை அருகே வெவ்வேறு பகுதிகளில் இருவா் தற்கொலை
திருநெல்வேலி அருகே வெவ்வேறு பகுதிகளில் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள மேலசெவல் ராஜூவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் மாரிசிவன் (49). உணவு விடுதி நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனா். கடன் தொல்லையால் குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கினாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மற்றொரு சம்பவம்: திருநெல்வேலி அருகேயுள்ள திடியூரை சோ்ந்தவா் முருகன் (63). இவா், குடும்பத் தகராறு காரணமாக விஷம் குடித்தாராம். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.