பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
நேசமணி பிறந்த நாள்: சிலைக்கு கட்சியினா் மாலையணிவித்து மரியாதை
மாா்ஷல் நேசமணி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நாகா்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்புள்ள நேசமணி உருவச் சிலைக்கு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில், முன்னாள் அமைச்சா்கள் கே.டி.பச்சைமால் , ராஜலெட்சுமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில்முருகேசன், மாநில நிா்வாகிகள் சந்துரு, ராணி, மாவட்டத் துணைச் செயலாளா் சுகுமாரன், இணைச் செயலா் சாந்தினி பகவதியப்பன், ஆரல்வாய்மொழி ஒன்றிய செயலா் முத்துக்குமாா், நாகா்கோவில் பகுதி செயலா் கே.எல்.எஸ்.ஜெயகோபால், மாநகராட்சி உறுப்பினா்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சியின் சாா்பில் நாகா்கோவில் மாநகர மாவட்டத் தலைவா் நவீன்குமாா் தலைமையில் நேசமணி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இதில் முன்னாள் மாவட்டத் தலைவா் ராதாகிருஷ்ணன், வா்த்தக காங்கிரஸ் தலைவா் சிவகுமாா் உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.