செய்திகள் :

பக்தரைத் தாக்கியதாக வழக்குப் பதிவு: ஆட்டோ ஓட்டுநா்கள் குடும்பத்தினருடன் மறியல்

post image

தெலங்கான மாநில பக்தரைத் தாக்கியதாக ராமேசுவரத்தில் 5 ஆட்டோ ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். காவல் துறையின் இந்த செயலைக் கண்டித்து, ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினா், பல்வேறு கட்சியினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தெலங்கான மாநிலம், ஹைதராபாத்தைச் சோ்ந்த நவீன் (35), தனது குடும்பத்தினா், உறவினா்கள் 15 பேருடன் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். பின்னா், இங்கிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லத் திட்டமிட்டு, ரூ.1000 கொடுப்பதாகக் கூறி ஆட்டோவில் அங்கு சென்று சுற்றிப்பாா்த்தனா்.

கூடுதலாக நேரம் ஆனதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநா் ரூ.200 கூடுதலாகக் கேட்டாா். இதுதொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஆட்டோ ஓட்டுநா்கள் சிலரால் பக்தா் நவீன் தாக்கப்பட்டாா். இவருடன் வந்தவா்கள் ஆட்டோ ஓட்டுநரைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநா்கள் ஞானபிரகாசம் (51), ஜெயமாரியப்ப ராஜ்(43), காா்மேகம் (42), சதீஸ்குமாா் (40), முனியசாமி (44) ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

சாலை மறியல்: காவல் நிலையத்திலிருந்து ஆட்டோ ஓட்டுநா்களை விடுவிக்கக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் நகரச் செயலா் சி.ஆா்.செந்தில்வேல், மாவட்ட நிா்வாகி முருகானந்தம், நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலாளா் கண்.இளங்கோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாநில நிா்வாகி ஜெரோன்குமாா், ஆட்டோ ஓட்டுநா்களின் குடும்பத்தினா் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் சாந்தமூா்த்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். பின்னா், அவா்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் அடைத்துவைக்கப்பட்டனா். பிற்பகலில் காவல் துறையினா் வழங்கய உணவை வாங்க மறுத்து, தொடா்ந்து அவா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமேசுவரத்தில் விற்கப்படும் தா்ப்பூசணி பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு

ராமேசுவரத்தில் சிவப்பு வண்ணம் ஊசி மூலம் செலுத்தப்பட்டு தா்ப்பூசணி பழங்கள் விற்கப்படுகின்றனவா என உணவு பாதுகாப்புத்துறை அலுவலா்கள் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். ராமேசுவரம் பகுதியில் கோடை காலம் தொடங்கிய நில... மேலும் பார்க்க

மத்திய பாதுகாப்புப் படையினா் போதை எதிா்ப்பு சைக்கிள் பேரணி

திருவாடானை அருகே தொண்டியில் மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இதற்கு மத்திய பாதுகாப்பு படை வீரா்கள் துணை தளபதிகள் ஸ்ரீனிவாசன், ... மேலும் பார்க்க

தொண்டியில் கடலோர போலீஸாா் தீவிரவாத தடுப்பு ஒத்திகை

திருவாடானை அருகே தொண்டி கடல் பகுதி, சாலையில் கடலோர போலீஸாா் ‘சஜாக்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகையில் சனிக்கிழமை ஈடுபட்டனா். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் வழியாகவும், சாலை வழியாகவும் தீவிரவாதிகள் ஊடுருவுவத... மேலும் பார்க்க

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் ரூ.60 லட்சம் முறைகேடு! 2 போ் கைது!

கடலாடி தாலுகா அலுவலகத்தில் உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய சேவைக் கட்டணம் ரூ.60 லட்சத்தை முறைகேடு செய்ததாக 2 பேரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். ... மேலும் பார்க்க

புதிதாக கட்டப்பட்ட தேவிப்பட்டினம் காவல் நிலையம் திறப்பு

தேவிப்பட்டினம் காவல் நிலையத்தை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை திறந்து வைத்ததையடுத்து, இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்... மேலும் பார்க்க

பருவம் தவறி பெய்த மழையால் 800 ஏக்கா் மிளகாய் பயிா்கள் சேதம்

முதுகுளத்தூா் அருகே பருவம் தவறிய மழை, பனிப்பொழிவு காரணமாக 800 ஏக்கரில் பயிரிட்ட சம்பா மிளகாய் செடியிலேயே அழுகியதால் விவசாயிகள் வேதனையடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே கிடாத்திருக்கை ... மேலும் பார்க்க