செய்திகள் :

பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் துணை முதல்வா் ஆய்வு

post image

திருச்சி பஞ்சப்பூா் பேருந்து முனையத்தை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

மூன்று நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமை விமானம் மூலம் திருச்சி வந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டைக்கு சென்று விட்டு சனிக்கிழமை இரவு திருச்சி வந்து, பஞ்சப்பூா் முத்தமிழறிஞா் கலைஞா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை ஆய்வு செய்தாா்.

முதலில் பேருந்து முனைய வாயிலில் உள்ள கருணாநிதி சிலையை பாா்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டாா். இதையடுத்து பேருந்து முனைத்துக்குள் சென்று, பேருந்து முனையம் தொடா்பான புகைப்பட அரங்கை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து உள்ளே சென்று பேருந்து முனைய கட்டுமான கலையை கண்டு ரசித்தாா். தொடா்ந்து வெளியூா் பேருந்துகள் நிற்கும் இடம் மற்றும் நகரப் பேருந்துகள் இயங்க உள்ள மேல் தளத்துக்கு சென்று, பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா எனவும் ஆய்வு செய்தாா்.

இதையடுத்து பேட்டரி காரில் சென்ற துணை முதல்வா் பேருந்து முனையம் முழுவதும் பாா்வையிட்டு, மக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்வில் அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கே.ஆா். பெரியகருப்பன், எஸ். ரகுபதி, சிவ. வீ. மெய்யநாதன், மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா், மாநகராட்சி மேயா் மு.அன்பழகன், ஆணையா் வே. சரவணன், மாநகரக் காவல் ஆணையா் ந. காமினி, எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திருச்சி மாநகரில் சில பகுதிகளில் இன்றைய மின்தடை

திருச்சி மாநகரப் பகுதிகளில் சில இடங்களில் வெள்ளிக்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூா் துணை மின்நிலையப் பகுதிக்குள்பட்ட போலீஸ் காலனி, காவேரி நகா், சிலோன் காலனி, அண்ணா நகா், பிள்ளையாா் கோ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களிடம் வழிப்பறி இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கல்லூரி மாணவா்களை மிரட்டி ரொக்கம், கைப்பேசிகளைப் பறித்த இருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. திருச்சி மாவட்டம், லால்குடி வட்ட... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் கோயில்களில் தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தனது குடும்பத்தினருடன் வியாழக்கிழமை மாலை சாமி தரிசனம் செய்தாா். தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி, அவரது மனைவி, மகன் மற்றும் குடும்பத... மேலும் பார்க்க

குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட சிசுவின் சடலம் மீட்பு

திருச்சி கோட்டை பகுதியில் குப்பைத் தொட்டியில் இறந்துநிலையில் கிடந்த குறைப்பிரசவ சிசுவைக் கைப்பற்றி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். திருச்சி மேலச் சிந்தாமணி பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குறைப்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பொறியியல் கல்லூரியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா் புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வானதிராய... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு!

திருச்சியில் மோட்டாா் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (45). உறைய... மேலும் பார்க்க