செய்திகள் :

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை அணிக்கான எச்சரிக்கை: ரிக்கல்டான்

post image

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: 8-வது இடத்துடன் ஐபிஎல் தொடரை நிறைவு செய்த நடப்பு சாம்பியன்; பேட்ஸ்மேன்களை குறைகூறும் ரஹானே!

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான நேற்றையப் போட்டியில் ஏற்பட்ட தோல்வியின் மூலம், புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களுக்குள் நிறைவு செய்யும் வாய்ப்பை மும்பை இந்தியன்ஸ் அணி தவறவிட்டது. மும்பை அணி 14 போட்டிகளில் 8 வெற்றிகள் பெற்று 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

ரியான் ரிக்கல்டான் கூறுவதென்ன?

பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தோல்வி மும்பை இந்தியன்ஸ் அணிக்கான எச்சரிக்கை எனவும், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பஞ்சாப் கிங்ஸ் அணி எங்களைவிட சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றனர். இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கொடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. இந்த போட்டியில் தோற்றுவிட்டதால், எல்லாம் முடிந்துவிட்டது என்றாகாது. உண்மையைக் கூறவேண்டுமென்றால், மும்பை அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஒரு சில இடங்களில் முன்னேற்றம் தேவைப்படுகிறது. எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் திறமை எங்களுக்கு இருக்கிறது. எலிமினேட்டர் போட்டியில் வலுவாக மீண்டு வருவோம்.

இதையும் படிக்க: சிஎஸ்கேவின் பேட்டிங் பயிற்சியாளராகும் ரெய்னா!

நாங்கள் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். முதலில் பேட்டிங் செய்வதில் எங்களுக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லை. 200 அல்லது 220 ரன்கள் எடுத்திருந்தால், எதிரணிக்கு சவால் அளிக்கும் விதமாக எங்களது பந்துவீச்சாளர்கள் செயல்பட்டிருப்பார்கள். மும்பை இந்தியன்ஸ் அணி 200 ரன்களுக்கும் அதிகமாக ரன்கள் குவித்து அதிக முறை வெற்றி பெற்றதாகவே வரலாறு கூறுகிறது. முக்கியமான தருணத்தில் விக்கெட்டுகளை இழந்ததால், எங்களால் 200 ரன்களுக்கும் அதிகமாக எடுக்க முடியவில்லை என்றார்.

வருகிற மே 30 ஆம் தேதி நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 229 ரன்கள் இலக்கு!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்... மேலும் பார்க்க

ரோஹித் சர்மா அதிரடி; ஒரே போட்டியில் இரண்டு சாதனைகள்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ரோஹித் சர்மா இரண்டு சாதனைகளை படைத்துள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெற்று வரும் எலிமினேட்டர் போட்டிய... மேலும் பார்க்க

எலிமினேட்டர்: மும்பை பேட்டிங்; பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள்!

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் இன்று (மே 30) நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் மும்பை இ... மேலும் பார்க்க

ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த பில் சால்ட்!

ஐபிஎல் போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் பில் சால்ட் அசத்தியுள்ளார்.ஐபிஎல் தொடரில் சண்டீகரில் நேற்று (மே 29) நடைபெற்ற குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல்லைவிட சிறந்த இடம் கிடையாது: ஜோஸ் ஹேசில்வுட்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தயாராக ஐபிஎல் தொடரைவிட சிறந்த இடம் கிடையாது என ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அ... மேலும் பார்க்க

இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்சிபியுடன் மோதுவோம்: பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிராக குவாலிஃபையர் 1 போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து யோசிப்பதை தவிர்க்குமாறு பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோப்ஸ் தெரிவித்துள்ளார்.ஐபிஎல் ... மேலும் பார்க்க