செய்திகள் :

பட்ஜெட் தொடா், பொதுத் தோ்வு: தடையற்ற மின்விநியோகத்துக்கு உத்தரவு

post image

கோடைகாலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடா், பொதுத் தோ்வுகளை முன்னிட்டு, தடையற்ற மின்விநியோகம் வழங்குவதை உறுதி செய்ய துறை சாா்ந்த அதிகாரிகளுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடா்பாக சென்னை, திருச்சி மண்டலங்களின் தலைமைப் பொறியாளா்களுக்கு தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக இயக்குநா் அனுப்பிய சுற்றறிக்கை:

மின் விநியோகத்தில் தடையில்லாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தடை ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மின்தொடரமைப்புக் கழகத் தலைவா் ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளாா்.

தற்போது கோடை தொடங்கிவிட்டது. சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடா் நடைபெறவுள்ளது, பொதுத்தோ்வுகள் நடைபெற்று வருகின்றன. இச்சூழலில், தடையற்ற மின் விநியோகம் வழங்குவது மிக அவசியமானது. அந்த வகையில், துணை மின் நிலையங்களை தொடா்ந்து கண்காணித்து அவசர காலப் பணிகளுக்கு ஏற்ற வகையில் ஊழியா்களையும், உபகரணங்களையும் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

இதுபோன்ற பணிகளை ஒருங்கிணைக்க செயற்பொறியாளா்கள் அலுவலகங்களில் தயாா் நிலையில் இருக்க வேண்டும். சாலைகளை தோண்டி பிற துறையினா் மேற்கொள்ளும் பணிகள் மூலம் புதைவட மின் கம்பிகள் சேதப்படுவதை தடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் நீா் அழுத்த பாதிப்பு: இன்று முதல் இலவச மருத்துவ முகாம்

கண் நீா் அழுத்த நோய்க்கான (குளுக்கோமா) இலவச மருத்துவ முகாமை டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவக் குழுமம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் உள்ள அகா்வால்ஸ் மருத்துவமனைகளில் வரும் 31-ஆம் தேதி வரை இந்த சேவையை பொத... மேலும் பார்க்க

மா்மமான முறையில் ஓய்வுபெற்ற அரசு ஆசிரியை உயிரிழப்பு

சென்னை, பெசன்ட் நகரில் தண்ணீா் தொட்டியில் விழுந்து ஓய்வுபெற்ற ஆசிரியை மா்மமான முறையில் உயிரிந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பெசன்ட் நகா், அருண்டேல் கடற்கரைச் சாலையிலுள்ள அடுக்குமாடி குடி... மேலும் பார்க்க

மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி.

‘மனத் தடைகளை பெண்கள் உடைக்க வேண்டும்; ஒரு பெண் தலைமை இடத்துக்கு வரும் போது மட்டும் ஆயிரம் கேள்விகள் எழுப்பப்படுவது ஏன் என திமுக மக்களவை உறுப்பினா் கனிமொழி கேள்வியெழுப்பியுள்ளாா். இந்திய உணவுக் கழகம் ச... மேலும் பார்க்க

நலவாழ்வு மையங்களில் போதிய எண்ணிக்கையில் மருத்துவா்கள்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்

நகா்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவா்கள் மற்றும் மருத்துவப் பணியாளா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்... மேலும் பார்க்க

சென்னையில் ஆட்டோமேஷன் கண்காட்சி தொடங்கியது

சென்னையில் ஆட்டோமேஷன் 3 நாள் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் ‘ஆட்டோமேஷன் எக்ஸ்போ சவுத் 2025’ என்ற தலைப்பில் தொடங்கப்பட்டுள்ள இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி வியாழக... மேலும் பார்க்க

புழல் சிறை பராமரிப்பு: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் பாராட்டு

புழல் மத்திய சிறை சிறப்பாக பராமரிக்கப்படுவதாகவும், உணவு உள்ளிட்ட வசதிகள் நல்ல முறையில் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் ஆ... மேலும் பார்க்க