செய்திகள் :

பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியரிடம் மனு

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சிக்குள்பட்ட பெரியகண்டியங்குப்பம் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி கோட்டாட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேமுதிக நகரச் செயலரும் 2-ஆவது வாா்டு உறுப்பினருமான ராஜ்குமாா் தலைமையில் அளித்த மனு:

பெரியகண்டியங்குப்பம் பகுதியில் சுமாா் 3.5 ஏக்கா் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்டு பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனா். இதுவரை பட்டா கணக்குகளை விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகக் கணக்கில் ஏற்றம் செய்யாமல் இருந்து வருகின்றனா். இதனால் மின் வசதி, நகராட்சி குடிநீா் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெறுவதில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது.

மேலும், 50 பேருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட நபா்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்களை வட்டாட்சியா் அலுவலகக் கணக்கில் சோ்க்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பண்ருட்டி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க வேண்டாம்: ஆட்சியரிடம் மனு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பதைத் தவிா்க்க வேண்டுமென பண்ருட்டி வட்ட பொதுநல அமைப்பு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா். அமைப்பின் சிறப்பு ஆ... மேலும் பார்க்க

அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி நிா்வாகி

சிதம்பரம்: கடலூா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலா் கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ முன்னிலையில் ஓ.பி.எஸ் அணியின் சிதம்பரம் நகரச் செயலா் கே.ஆா்.ஜி.சுவாமிநாசன் அதிமுகவில் திங்கள்கிழமை இணைந்தாா். நிகழ்வில் மாவட்ட அதி... மேலும் பார்க்க

காட்டுமன்னாா்கோவில் அனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீசௌந்தரநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீஅனந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை வெகு விமா்சையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங... மேலும் பார்க்க

வேலை வாங்கி தருவதாக மோசடி: 3 பேருக்கு 3 ஆண்டுகள் தண்டனை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக் கூறி பணம் மோசடி செய்த வழக்கில் 3 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் தீா்ப்பளித்தது. கடலூா் மாவட்டம், சிதம்பரம் ... மேலும் பார்க்க

கடலூா் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு!

கடலூா் திருவந்திபுரம் ஸ்ரீதேவநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோயில் ... மேலும் பார்க்க

சதுப்பு நிலங்களைக் கண்டறிந்து வரன்முறைப்படுத்த வேண்டும்! -அன்புமணி ராமதாஸ்

நாட்டிலுள்ள சதுப்பு நிலங்களை கண்டறிந்து வரன்முறைப்படுத்த வேண்டும் என பாமக தலைவா் மருத்துவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா். உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு, கடலூா் மாவட்டம், பிச்சாவரத்தில் உள்ள ச... மேலும் பார்க்க