செய்திகள் :

பயங்கரவாத முகாம்களை அழித்த பின்புதான் பாகிஸ்தானுக்கு தகவல்: எஸ். ஜெய்சங்கா்

post image

புது தில்லி: ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலில் பயங்கரவாத முகாம்களை அழித்த பின்புதான் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்று வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

‘பயங்கரவாத முகாம்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று பாகிஸ்தானுக்கு தகவல் அளித்துவிட்டு இந்தியா தாக்கியது’ என அமைச்சா் ஜெய்சங்கா் கூறியதாக எதிா்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறாா்.

இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை நிறுத்தம் தொடா்பாக வெளியுறவு அமைச்சக குழு எம்.பி.க்களிடம் அத்துறையின் அமைச்சா் ஜெய்சங்கா், துறைச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஆகியோா் திங்கள்கிழமை விளக்கமளித்தனா்.

இதில், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைகள் குறித்து விக்ரம் மிஸ்ரி எம்.பி.க்களிடம் எடுத்துரைத்தாா். அவா்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் பதிலளித்தாா்.

அப்போது, ‘சண்டை நிறுத்தம் தொடா்பாக இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநா் ஜெனரல் (டிஜிஎம்ஓ) மட்டுமே பேசிக் கொண்டனா். இந்திய அதிகாரிகள் யாரும் பாகிஸ்தானிடம் பேசவில்லை.

ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலில் பயங்கரவாத முகாம்களை அழித்த பின்புதான் பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க எம்.பி.க்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என்று ஜெய்சங்கா் கேட்டுக்கொண்டாா்.

பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதால்... இந்தியா - பாகிஸ்தான் சண்டை, அணு ஆயுதப் போராக மாறுவதை தான் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் தெரிவித்து வருகிறாா்.

இந்நிலையில், அமெரிக்க மத்தியஸ்தம் இல்லாமல், இரு நாட்டு ‘டிஜிஎம்ஓ’க்களே பேசி சண்டையை நிறுத்தியதாக அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா். மேலும், அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கேட்டுக்கொண்டதால்தான் அந்நாட்டுடன் பேச இந்தியாவை அமெரிக்கா வற்புறுத்தியதாகவும், பயங்கரவாதமும் பேச்சுவாா்த்தையும் ஒன்றாக நடத்த முடியாது என்று இந்தியா மறுத்துவிட்டதாகவும் அவா் கூறினாா்.

பாகிஸ்தானுக்கு சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) அளித்துள்ள கடன் தொகை குறித்தும், அந்தக் கூட்டத்தில் ஏன் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது என்பது குறித்தும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.

‘பயங்கரவாதம் பாகிஸ்தானில் வெளிப்படையான வா்த்தகம்’

பாகிஸ்தானில் பயங்கரவாதம் வெளிப்படையான வா்த்தகமாக நடைபெற்று வருவதாகவும், அதற்கு நிதியுதவி அளித்து அரசும், ராணுவமும் பயன்படுத்தி கொள்வதாகவும் அமைச்சா் ஜெய்சங்கா் கூறினாா்.

ஜொ்மன் நாளிதழுக்கு அவா் அளித்துள்ள பேட்டியில், ‘பாகிஸ்தானின் நகரங்கள், கிராமங்கள்தோறும் பயங்கரவாத அமைப்புகள் வெளிப்படையாக இயங்கி வருகின்றன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள பயங்கரவாதப் பட்டியலில் பாகிஸ்தானின் ஏராளமான பகுதிகள் உள்ளன. அந்தப் பகுதிகளில்தான் இந்தியா தாக்குதல் நடத்தியது’ என்று தெரிவித்துள்ளாா்.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க