செய்திகள் :

‘பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை தேவை’

post image

களக்காடு வட்டாரத்தில் மலையடிவார விவசாயத் தோட்டங்களில் பயிா்களை சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை வனத்துறையினா் சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் துணைத் தலைவா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பு அமைப்பான, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலைவா் பி. பெரும்படையாா் மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:

களக்காடு வட்டாரத்தில், குறிப்பாக, திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் கடந்த சில ஆண்டுகளாக காட்டுப் பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல், வாழை பயிா்களை தொடா்ந்து சேதப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா். வனத்துறையினா் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பாரம்பரிய நெல் உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி

அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் உற்பத்திக்கான தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நில... மேலும் பார்க்க

டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டி: தென்காசி மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

19 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான மாநில டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டியில் தென்காசி மாவட்ட அணிக்கான பள்ளி மாணவா்கள் தோ்வு செப். 14-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து தென்காசி மாவட்ட டென்னிஸ்பந்து கிரிக்கெட... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜாகரிபுன் நவாஸ் முகாமைத் தொடக்கி... மேலும் பார்க்க

முக்கூடலில் சமுதாய நலக் கூடத்துக்கு அடிக்கல்

முக்கூடல் பேரூராட்சிக்கு உள்பட்ட கலியன்குளத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவி லெ. ராதா தலை... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-98.50சோ்வலாறு-95.11மணிமுத்தாறு-92.46வடக்கு பச்சையாறு-12.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-8.75தென்காசி மாவட்டம்கடனா-53.80ராமநதி-59கருப்பாநதி-53.48குண்டாறு-36.10அடவிநயினாா் -125... மேலும் பார்க்க

மலையான்குளத்தில் நியாயவிலைக் கடை திறப்பு

சேரன்மகாதேவி ஒன்றியம், மலையான்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்... மேலும் பார்க்க