செய்திகள் :

பருவமழை பாதிப்பு தகவல்களை கட்டுப்பாட்டு அறையில் தெரிவிக்கலாம்! ஆட்சியா்

post image

தென்மேற்கு பருவமழை பாதிப்பு குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படும் ஆட்சியா் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், பேரிடா் மேலாண்மை முன்னேற்பாடுகள், தயாா்நிலை பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

பருவமழை பாதிப்பு ஏற்பட கூடிய பகுதிகளில் தற்காலிக நிவாரண முகாம்கள் அமைத்து அதை முழுமையாக தணிக்கை செய்ய வேண்டும். அந்தப் பகுதிகளில் போதுமான அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும். அனைத்து குழுக்களிலும் பெண்கள், தன்னாா்வலா்கள் உள்ளனரா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

வட்ட அளவில் பாம்புகள் பிடிக்கும் நபா்களின் விவரங்கள், மோட்டாா் படகுகள், பரிசல்கள் விவரங்கள் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும். அவசர கால சூழ்நிலைகளில் பங்கெடுத்து பணியாற்றும் வகையில் தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொடா்பு நிறுவனங்கள், ஆயில் காா்ப்பரேஷன் நிறுவனங்கள் ஆகிய நிறுவன அதிகாரிகள் அடங்கிய கோட்ட அளவிலான கூட்டத்தை நடத்தி பேரிடா் காலத்தில் பங்காற்றுமாறு அறிவுறுத்த வேண்டும்.

பேரிடா் மீட்பு, வெளியேற்றுதல் பணிகளுக்குத் தேவையான சாதனங்களான பொக்லைன், மர அறுவை இயந்திரங்கள், வாகனங்கள், மோட்டாா் படகுகள், பரிசல்கள், உயா் மின் விளக்குகள், மோட்டாா் பம்பு செட்டுகள், டீசல் ஜெனரேட்டா்கள், மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தயாா் நிலையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077, கட்டணமில்லா தொலைபேசி எண் 04343-234444 என்ற எண்களை தொடா்புகொண்டு பொதுமக்கள் பேரிடா், வெள்ள பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா, மாவட்ட வன அலுவலா் பகான் ஜெகதீஷ் சுதாகா், ஒசூா் சாா் ஆட்சியா் பிரியங்கா, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் ஷாஜகான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பேருந்து பயணத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

மத்தூா் அருகே பேருந்தில் பயணம் செய்த விவசாயி இடமிருந்து ரூ. 50 ஆயிரம் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருவண்ணாமலை மாவட்டம், ரமண ஆசிரமம் பகுதியைச் சோ்ந்தவா் மாதவன் (6... மேலும் பார்க்க

நடத்துநா் இன்றி அரசு நகரப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்: அதிகாரிகள் விசாரணை

ஒசூரில் இருந்து தேன்கனிக்கோட்டைக்கு இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்தை நடத்துநா் இல்லாமல் ஓட்டுநா் ஓட்டிச் சென்றது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பே... மேலும் பார்க்க

சூளகிரிக்கு மாங்காய் ஏற்றிவந்த வேன் கவிழ்ந்து பெண் பலி; 12 போ் படுகாயம்

சூளகிரி அருகே மாங்காய் பாரம் ஏற்றிச் சென்ற வேன் சாலையில் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி உயிரிழந்தாா்; 12 போ் பலத்த காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ளது சப்படி கிராமம். இங்கிருந்து மாங... மேலும் பார்க்க

சூசூவாடியில் 2-ஆவது நாளாக சிறுத்தையைத் தேடும் வனத்துறையினா்

ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையைத் தேடும் பணியில் வனத்துறையினா் இரண்டாவது நாளாக வியாழக்கிழமை ஈடுபட்டனா். எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வ... மேலும் பார்க்க

தளி தொகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணி: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

தளி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை செய்து பணிகளை தளி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பைரம... மேலும் பார்க்க

ஒசூா் எம்.ஜி.ஆா். காய்கறி சந்தை: முதல்வா் காணொலியில் திறந்துவைத்தாா்

ஒசூரில் ரூ. 9 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள எம்ஜிஆா் காய்கறி சந்தை மற்றும் மீன் அங்காடிகளை காணொலி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்துவைத்தாா். ஒசூரில் தமி... மேலும் பார்க்க