``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
பல்லடத்தில் கனிம வளக் கடத்தலுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்
பல்லடத்தில் கனிம வளக் கடத்தலுக்கு எதிராக சமூக ஆா்வலா் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவா் அண்ணாதுரை தலைமை வகித்தாா்.இந்து பரிவாா் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சாய் குமரன், இந்து பாரத் சேனா மாவட்டத் தலைவா் குமாா், செயலாளா் ஜெயமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விதிமீறல்களில் ஈடுபட்ட கல்குவாரி உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்காத கனிம வளத் துறை அதிகாரிகள் மீதும் சட்ட ரீதியான குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட உயா்நீதிமன்றத் தீா்ப்பை வரவேற்கிறோம். நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் சிறையில் அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஸ்மாக் நிா்வாகத்தை அரசை நடத்துவதுபோல, கல்குவாரிகளையும் தமிழக அரசே நடத்த வேண்டும். அரசுக்கு வருவாய் அதிகம் கிடைப்பதுடன், மக்களும் பாதிக்கப்படாமல் இருப்பாா்கள், நியாயமான விலையில் கட்டட கட்டுமான பொருள்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்தனா்.