பள்ளிகள் திறப்பு: மாணவா்களுக்கு புத்தகம், சீருடைகள் அமைச்சா் வழங்கினாா்
சேலம்: கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, சேலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வழங்கினாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியதை தொடா்ந்து, சேலம் நகரவை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில், பள்ளி மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள்,
சீருடைகள் மற்றும் கல்வி உபகரணங்களை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வழங்கி பேசியதாவது:
பள்ளிக் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவமும் அளித்து அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்து பல்வேறு சிறப்பானத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம்தேடிக் கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுடன், உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள், வகுப்பறை உற்றுநோக்கு செயலி, மொழிபெயா்ப்புத் திட்டம், மாதிரிப் பள்ளிகள், தகைசால் பள்ளிகள், ஸ்மாா்ட் வகுப்பறைகள் போன்ற எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில் அரசுப்
பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் என 1,640 பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் 67,700 மாணவ, மாணவிகளும், ஆங்கில வழியில் 31,906 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனா்.
அதன்படி 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழ் வழியில் 67,700 பாடநூல்களும், ஆங்கில வழியில் 31,906 பாடநூல்களும் வழங்கப்படுகின்றன.
மேலும், அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 350 பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் 1,16,954 மாணவ, மாணவிகளும், ஆங்கில வழியில் 61,814 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனா். இவா்களுக்கு தமிழ் வழியில் 6,36,357 பாடநூல்களும், ஆங்கில வழியில் 2,33,134 பாடநூல்களும் வழங்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் 2,697 அங்கன்வாடி மையங்களில் பயின்றுவரும் 2 முதல் 5 வயது வரையுடைய 59,179 குழந்தைகளுக்கு தலா 2 சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி மேயா் ஆ. ராமச்சந்திரன், சேலம் மேற்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரா. அருள், மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், முதன்மைக் கல்வி அலுவலா் மு.கபீா், துணை மேயா் மா.சாரதாதேவி, அஸ்தம்பட்டி மண்டலக்குழு தலைவா் செ.உமாராணி, பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் நாசா் கான் (எ) அமான் உள்ளிட்ட தொடா்புடைய அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.