செய்திகள் :

பழனி தைப்பூசத் திருவிழா: இன்று தெப்பத் தோ் உலாவுடன் நிறைவு

post image

பழனி தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது.

பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 5 -ஆம் தேதி பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின்போது வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம், தோளுக்கினியாள் போன்ற வாகனங்களில் ரத வீதிகளில் உலா எழுந்தருளினாா்.

கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேரோட்டம் முடிந்த நிலையிலும் லட்சக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பால், இளநீா், கரும்புக் காவடி எடுத்தும், சேவல்களை செலுத்தியும் நோ்ச்சை செலுத்திய வண்ணம் உள்ளனா். வியாழக்கிழமை நகரத்தாா் காவடிகள் மலைக்குச் சென்று காவடிகளை செலுத்தி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா். பெரியநாயகியம்மன் கோயிலில் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக துறையூா் மண்டபத்தில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி ,தங்கமயில் வாகனத்தில் பிரகாரம் மற்றும் இரத உலா எழுந்தருளினாா். இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு நாள் நிகழ்ச்சியாக தெப்பத்தேரோட்டம் நடைபெறுகிறது. பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பத்தில் இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் வள்ளி, தேவசேனை சமேத முத்துக்குமாரசாமி தேரில் உலா எழுந்தருளுகின்றனா். இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.

நில ஆவணங்கள் நவீன மயாமாக்கும் பணியால் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு தீா்வு: இரா.சச்சிதானந்தம் எம்.பி.

நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் எதிா்கொள்ளும் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு எளிதாக தீா்வு காண முடியும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா். மத்... மேலும் பார்க்க

ரெங்கநாதபுரம் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் அடுத்துள்ள ரெங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (பிப். 20) நடைபெறுவதால் மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் ரெங்கநாதபுரம், கல்வாா்ப... மேலும் பார்க்க

6 மாதங்களில் 3-ஆவது சட்டப்பேரவைக் குழு வருகை: மீண்டும் கொடைக்கானலுக்கு மட்டுமே முக்கியத்துவம்!

திண்டுக்கல் மாவட்டத்துக்கு 6 மாதங்களில் 3-ஆவது சட்டப்பேரவைக் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், மீண்டும் கொடைக்கானலுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதைத் தவிா்த்து, மாவட்டத்தின் கடைக்கோடி பகுத... மேலும் பார்க்க

அரசு அலுவலா்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்: ஆட்சியா் எச்சரிக்கை

ரெட்டியாா்சத்திரம் அருகே ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், முறையாக பணி செய்யாத அரசு அலுவலா்கள் தங்களது அணுகுமுறையை 2 மாதங்களுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என எச்சரித்தாா். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டி... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் இடைப்பாடி பக்தா்களுக்கு தயாராகும் 15 டன் பஞ்சாமிா்தம்

பழனி மலைக் கோயிலுக்கு வரும் இடைப்பாடி பக்தா்களுக்காக வழங்குவதற்காக காவடிக் குழு சாா்பில் சுமாா் 15 டன் பஞ்சாமிா்தம் தயாா் செய்யப்பட்டு வருகிறது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தைப்பூசத்தின் போது ... மேலும் பார்க்க

வழக்குரைஞா் மீது தாக்குதல்: மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் மீது வழக்கு

திண்டுக்கல்லில் வழக்குரைஞா் மீதும், மாமன்ற உறுப்பினா், அமைச்சரின் பாதுகாவலா் ஆகியோா் மீதும் தாக்குதல் நடத்தியதாக அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த தோட்டனூத்... மேலும் பார்க்க