செய்திகள் :

பாகிஸ்தானுக்கு உளவு: கைதான சிஆர்பிஎஃப் வீரருக்கும் பஹல்காமுக்கும் என்ன தொடர்பு?

post image

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்ட சிஆர்பிஎஃப் வீரருக்கும் பஹல்காமுக்கு இடையேயான தொடர்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் உளவுத் துறையுடன் தொடர்பில் இருந்ததாகவும், இந்திய ராணுவ ரகசியங்கள், ராணுவ நடமாட்டம், முக்கிய ராணுவ தளவாடங்கள் பொருத்தப்பட்ட இடங்கள் குறித்த தகவல்களை அளித்ததற்காகவும் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் உதவி ஆய்வாளர் மோதிராம் ஜாட் என்பவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் திங்கள்கிழமை கைது செய்தனர்.

ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பவர்களை இந்திய விசாரணை அமைப்புகள் தீவிரமாக கண்காணித்த நிலையில், மோதிராம் ஜாட் சிக்கியுள்ளார்.

இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய என்ஐஏ அதிகாரிகள், ஜூன் 6ஆம் தேதி வரை காவலில் எடுத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பஹல்காமில் பணிபுரிந்தவர்..

கைது செய்யப்பட்டுள்ள மோதிராம் ஜாட் என்பவர் பஹல்காமின் சிஆர்பிஎஃப் 116 ஆவது படைப் பிரிவில் பணிபுரிந்தவர் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதற்கு 6 நாள்கள் முன்புதான் பஹல்காமில் இருந்து வேறு பகுதிக்கு மோதிராம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதனால், பஹல்காம் தாக்குதல் நடைபெறுவதற்கு பயங்கரவாதிகளுக்கு பல்வேறு தகவலை மோதிராம் பகிர்ந்திருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்டவுடன் மோதிராம் ஜாட்டை பணிநீக்கம் செய்வதாக மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படை உத்தரவிட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் பாகிஸ்தானுடன் தொடர்பில் இருந்ததாக பஞ்சாப், ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க : ரூ. 25 லட்சம் இழப்புக்கு ரூ. 10,000 உதவித்தொகை! ஜம்மு - காஷ்மீர் மக்கள் அதிருப்தி!

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க