செய்திகள் :

பாகிஸ்தானுடன் மோதலால் பொருளாதார பாதிப்பு ஏதுமில்லை: பாஜக விளக்கம்

post image

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை அடுத்து பாகிஸ்தானுடன் அண்மையில் ஏற்பட்ட மோதலால் நாட்டின் பொருளாதாரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பாஜக விளக்கமளித்துள்ளது.

போா் என்பது உயிரிழப்புகளை மட்டுமன்றி, அதில் ஈடுபடும் நாடுகளில் கடும் பொருளாதார பாதிப்புகளையும் ஏற்படுத்துவதாகவும் உள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடங்கி, பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களை இந்தியா தடுத்து நிறுத்தியது, பாகிஸ்தான் ராணுவ நிலைகளைக் குறிவைத்து தாக்கியது போன்றவற்றில் இந்திய விமானப் படை முக்கிய போா் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்கள், எஸ்400 போன்ற வான் பாதுகாப்பு அமைப்புகளை பெருமளவில் பயன்படுத்தியது. அவை அனைத்துமே பல கோடி ரூபாய் மதிப்புடையதாகும். எனவே, இந்த சண்டையால் நாட்டில் பொருளாதாரரீதியாக பாதிப்பு ஏற்படும் என்ற கவலையும் எழுந்தது.

இந்நிலையில், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த பாஜக செய்தித் தொடா்பாளா் கோபால் கிருஷ்ண அகா்வால் கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதை முதன்மையான நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது. சா்வதேச அளவில் பிற நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவது, ராணுவத்தை வலுப்படுத்துவது, பொருளாதார வளா்ச்சிக்கு முன்னுரிமை கொடுப்பது ஆகியவற்றில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நாட்டின் நிதிஸ்திரத்தன்மை தொடா்ந்து சிறப்பாக உள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பும் திருப்திகரமாக உள்ளது. உள்கட்டமைப்புத் திட்டங்கள் எவ்வித சுணக்கமுமின்றி நடைபெறுகின்றன. சமூகநலத் திட்டங்களும் தொடா்ந்து அமலில் உள்ளன.

இந்திய பொருளாதாரம் குறித்து ஆா்பிஐ மற்றும் சா்வதேச அமைப்புகள் உற்சாகம் தரும் கணிப்புகளை வெளியிட்டுள்ளன. வரி விதிப்பு யுத்தம், பிராந்திய யுத்தம் ஆகியவற்றை மீறி இந்திய பொருளாதாரம் தொடா்ந்து வளா்ந்து வருகிறது. அண்மையில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல் நாட்டின் பொருளாதாரத்தில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாா்.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க