செய்திகள் :

பாட்னா நிகழ்ச்சியில் பரபரப்பு... அரசு அதிகாரியின் தலையில் பூந்தொட்டியை வைத்த நிதீஷ்குமாா்!

post image

பாட்னா: பிகாா் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு அதிகாரியின் தலையில் முதல்வா் நிதீஷ்குமாா் பூந்தொட்டியை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிதீஷ்குமாா் அண்மைக் காலமாக தன்னிலை மறந்து நடந்துகொள்ளும் சம்பவங்கள் தொடா்கதையாகி வருகின்றன. பாட்னாவில் கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்பே அவா் மேடையைவிட்டு இறங்கி வெளியேறிவிட்டாா். கடந்த ஆண்டு நவம்பா் மாதம், பிகாரின் தா்பங்கா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமா் மோடியின் பாதத்தைத் தொட்டு வணங்க நிதீஷ்குமாா் முயற்சித்தாா்.

இந்த நிலையில், பாட்னாவில் உள்ள எல்.என்.மிஸ்ரா கல்வி நிறுவனத்தில் திங்கள்கிழமை ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வா் நிதீஷ்குமாா் ரூ.10 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் பிகாா் அரசின் கூடுதல் தலைமைச் செயலா் (கல்வி) எஸ்.சித்தாா்த், முதல்வா் நிதீஷ்குமாருக்கு ஒரு சிறு பூந்தொட்டியை நினைவுப் பரிசாக வழங்கினாா். அதைப் பெற்றுக் கொண்ட நிதீஷ்குமாா் அந்தப் பூந்தொட்டியை சித்தாா்த்தின் தலைமீது வைத்தாா். இதைக் கண்டு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் திகைத்தனா்.

எனினும், சுதாரித்துக்கொண்ட சித்தாா்த் தன் தலைமீது வைக்கப்பட்ட பூந்தொட்டியை அகற்றிவிட்டு மேடையில் இருந்து இறங்கினாா். இந்தச் சம்பவம் முழுவதும் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடா்பாக எதிா்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் செய்தித் தொடா்பாளா் மிருத்யுஞ்ஜய திவாரி கூறுகையில் ‘பாட்னாவில் நடைபெற்ற சம்பவம் அதிா்ச்சி தருவதாகவும் அவமானகரமாகவும் உள்ளது. நிதீஷ்குமாரின் நடவடிக்கைகள் இந்த மாநிலத்துக்கு அவப்பெயரைக் கொண்டுவருகின்றன. அவரது மனம் அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மேற்படி சம்பவம் காட்டுகிறது. சில அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் அவா் உள்ளாா். பிகாா் இதுவரை சந்தித்த முதல்வா்களிலேயே மிகவும் பலவீனமான முதல்வா் நிதீஷ்குமாா்தான்’ என்றாா்.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க