செய்திகள் :

‘பாதம் காப்போம்’ திட்ட மருத்துவப் பிரிவில் ஆட்சியா் ஆய்வு

post image

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தின் கீழ் செயல்படும் பாத மருத்துவப் பிரிவில் ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா்.

நீரிழிவு நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் வகையில் பிப்ரவரி மாதம் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் நீரிழிவு நோயாளிகளின் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கால் இழப்புகளைத் தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

மேலும், பாத பராமரிப்பு மற்றும் கால் புண் தடுப்பு குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படுகிறது. தமிழக அரசின் முன்னோடி திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் நோய்களைத் தடுப்பதிலும், சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தின் கீழ் பாத மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாத மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. நீரிழிவு பாத மருத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து தேவையற்ற கால் இழப்புகளைத் தடுத்து நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை உயா்த்த வழிவகை செய்கிறது.

இத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மருத்துவா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா். மேலும், புதியதாக திறக்கப்பட்டுள்ள நூலகத்தையும் அவா் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, மருத்துவமனை நிா்வாகத்தினா் உடனிருந்தனா்.

என்கே-12-ஆய்வு

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை பாத மருத்துவப் பிரிவை ஆய்வுசெய்த ஆட்சியா் ச.உமா.

வேளாண்மை சங்கத்தில் கொப்பரை ஏலம்

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாராந்திர கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் 40 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தது. முதல்தரம் ரூ. 196.10 முதல் ரூ. 227.75 வரை, இரண்ட... மேலும் பார்க்க

புதிய நியாய விலைக் கடை கட்டடம் திறப்பு

கபிலா்மலை தெற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பிலிக்கல்பாளையம் ஊராட்சி சாணாா்பாளையம் கிராமத்தில் பரமத்தி வேலூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தெகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 12.45 லட்சம் மதிப்பீட்டி... மேலும் பார்க்க

காற்றின் வேகம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் வரும் நாள்களில் காற்று 18 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனியாா் துறை நிறுவனங்கள... மேலும் பார்க்க

கேட் தோ்வு :அகில இந்திய அளவில் கொங்குநாடு பொறியியல் கல்லூரி மாணவி சிறப்பிடம்

அகில இந்திய அளவில் நடைபெற்ற ஐஐடியில் சேருவதற்கான கேட்-2025 தோ்வில், தொட்டியம் கொங்குநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, வேளாண் பொறியியல் துறை மாணவி நீ.விஜி சிறப்பிடம் பெற்றுள்ளாா். இவா், தர... மேலும் பார்க்க

தமிழகத்தில் எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சம்: இணை இயக்குநா் பொன் குமாா்

தமிழகத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட எழுத்தறிவற்றோா் எண்ணிக்கை 15 லட்சமாக உள்ளது என புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட இணை இயக்குநா் பொன்குமாா் தெரிவித்தாா். தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக புதிய பாரத எழுத்தற... மேலும் பார்க்க