பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
‘பாதம் காப்போம்’ திட்ட மருத்துவப் பிரிவில் ஆட்சியா் ஆய்வு
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தின் கீழ் செயல்படும் பாத மருத்துவப் பிரிவில் ஆட்சியா் ச.உமா வியாழக்கிழமை ஆய்வுசெய்தாா்.
நீரிழிவு நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் வகையில் பிப்ரவரி மாதம் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டம் முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது. இத் திட்டத்தின் மூலம் நீரிழிவு நோயாளிகளின் பாதங்களில் ஏற்படும் பாதிப்புகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து கால் இழப்புகளைத் தடுப்பதற்கான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.
மேலும், பாத பராமரிப்பு மற்றும் கால் புண் தடுப்பு குறித்த விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படுகிறது. தமிழக அரசின் முன்னோடி திட்டமான ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் நோய்களைத் தடுப்பதிலும், சிகிச்சையளிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ‘பாதம் பாதுகாப்போம்’ திட்டத்தின் கீழ் பாத மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாத மருத்துவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. நீரிழிவு பாத மருத்துவத்தின் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைத்து தேவையற்ற கால் இழப்புகளைத் தடுத்து நீரிழிவு நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை உயா்த்த வழிவகை செய்கிறது.
இத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மருத்துவா்களிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா். மேலும், புதியதாக திறக்கப்பட்டுள்ள நூலகத்தையும் அவா் பாா்வையிட்டாா். ஆய்வின்போது, மருத்துவமனை நிா்வாகத்தினா் உடனிருந்தனா்.
என்கே-12-ஆய்வு
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை பாத மருத்துவப் பிரிவை ஆய்வுசெய்த ஆட்சியா் ச.உமா.