செய்திகள் :

பாலியல் கொடுமைக்கு எதிரான போராட்டம்; சபையை விட்டு வெளியேறி ஐ.டி பணிக்குச் செல்லும் கன்னியாஸ்திரி!

post image

கேரள மாநிலத்தின் சீரோ மலபார் சபையின் கீழ் உள்ள ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முளய்க்கல். இவர் மீது கோட்டயம் குருவிலங்காடு மடத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் 2018-ல் ஒரு புகார் அளித்தார். அதில், குருவிலங்காடு மடத்தில் வைத்து 2014 முதல் 2016 வரை 13 முறை பிஷப் பிராங்கோ முளய்க்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறியிருந்தார். கன்னியாஸ்திரிகள் வசிக்கும் மடத்தில் பார்வையாளராகச் சென்ற பிஷப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீது குருவிலங்காடு காவல் நிலையத்தில் கன்னியாஸ்திரி புகார் அளித்தார். ஆரம்பத்தில் போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, சபை தலைமைக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறி சக கன்னியாஸ்திரிகள் தெருவில் இறங்கி தொடர் போராட்டங்களை நடத்தினர். அந்த போராட்டத்தில் முன்னிலையில் நின்றவர் கன்னியாஸ்திரி அனுபமா. இதனால் அனுபமா உள்ளிட்ட சில கன்னியாஸ்திரிகளை சபை நிர்வாகம் இடம் மாற்றம் செய்தது. ஆனாலும், போராட்டம் தீவிரமானதை அடுத்து  பிஷப் பிராங்கோ முளய்க்கல் சபையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். மேலும் அவர் மீது பாலியல் வன்கொடுமை உள்பட 7 பிரிவுகளில் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது. அந்த வழக்கின்பேரில் 2018 செப்டம்பர் 21-ம் தேதி பிஷப் பிராங்கோ முளய்க்கல் கைதுசெய்யப்பட்டர். பிஷப்புக்கு எதிராக பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா என்பவர் வாக்குமூலம் அளித்திருந்தார். அவர் 2018-ம் வருடம்  மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

முன்னாள் பிஷப் பிராங்கோ முளய்க்கல்

இந்த வழக்கில் கன்னியாஸ்திரிகள் உள்பட நூறுக்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்த்தப்பட்டது. மேலும் 105 நாட்கள் ரகசிய விசாரணையும் நடத்தப்பட்டது. கோட்டயம் அடிஷனல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் தீர்ப்பு வெளியானது. அதில், பிஷப் பிராங்கோ முளய்க்கல் மீதான குற்றத்தை நிரூபிப்பதில் அரசு தரப்பு தோற்றுவிட்டதாகக் கூறியதுடன், பிஷப் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து அரசு தரப்பில் ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு மே மாதம் தனது பிஷப் பதவியை ராஜிநாமா செய்தார் பிராங்கோ முளய்க்கல். பிராங்கோ முளய்க்கல் மீது நடவடிக்கை எடுப்பதுடன், கன்னியாஸ்திரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கன்னியாஸ்திரிகள் வலியுறுத்தி வந்தனர்.

அனுபமா தலைமையில் கன்னியாஸ்திரிகள் நடத்திய போராட்டம்

இந்த நிலையில், கன்னியாஸ்திரிகளின் போராட்டங்களுக்கு தலைமை வகித்த கன்னியாஸ்திரி அனுபமா சபையில் இருந்து வெளியேறியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஜலந்தர் மறைமாவட்டத்தின் கீழ் உள்ள கோட்டயம் குருவிலங்காட்டில் செயல்பட்டுவரும் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்து ஒன்றரை மாதங்களுக்கு முன்பு வெளியேறிய கன்னியாஸ்திரி அனுபமா, ஆலப்புழா பள்ளிப்புறத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பி உள்ளார். எம்.எஸ்.டபிள்யூ படித்துள்ள அனுபமா பள்ளிப்புறம் இன்போ பார்க்கில் உள்ள ஐ.டி கம்பெனியில் டேட்டா எண்ட்ரி வேலைக்கு சேர்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். இது பற்றி அனுபமா நேரடியாக எந்த கருத்தையும் வெளிப்படுத்தவில்லை.

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய... மேலும் பார்க்க

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க

Kerala: பழங்குடி இளைஞரின் ஆடைகளை கழற்றி கட்டிவைத்து தாக்கிய கொடூர சம்பவம்.. நடந்தது என்ன?

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் பழங்குடியின இளைஞர் சிஜூ (20) என்பவரின் ஆடைகளை கழற்றி மின்கம்பத்தில் கட்டிவைத்து தாக்கியதாக புகார் எழுந்தது. கடந்த 24-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் வீடிய... மேலும் பார்க்க