செய்திகள் :

பிரதமா் மோடி குறித்து அவதூறு : காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

post image

சேலம்: பிரதமா் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து சேலம் மாநகா் மாவட்ட பாஜக சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பிகாரில் காங்கிரஸ் மூத்த தலைவா் ராகுல் காந்தி நடத்திய வாக்காளா் அதிகார யாத்திரை பேரணியின் போது, பிரதமா் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாா் குறித்து காங்கிரஸ் தலைவா்கள் அவதூறாக பேசியதாக சா்ச்சை எழுந்தது. இதைக் கண்டித்து, ஆளும் கட்சியினா் நடத்திய போராட்டத்தின் போது, பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டா்களுக்கு இடையே ஆங்காங்கே மோதலும் ஏற்பட்டது.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவா்களை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் மாநகா் மாவட்ட பாஜக தலைவா் சசிகுமாா் தலைமையில் அக்கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ராகுல் காந்தியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், முன்னாள் தலைவா் சுரேஷ்பாபு, தேசிய பொதுக்குழு உறுப்பினா் அண்ணாதுரை, மாவட்ட பொறுப்பாளா் முருகேசன், துணைத் தலைவா் கல்லாங்காடு சரவணன், பொதுச் செயலாளா் பிரபாகரன் உள்பட கிழக்கு, மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் வளா்ச்சி இலக்குகளுக்கான சா்வதேச தூதுவராக சேலம் மாநகராட்சி பள்ளி மாணவா் நியமிக்கப்பட்டுள்ளாா். ஐக்கிய நாடுகள் சபையின் மாணவா் கல்வி பயணத்தின் ஒருபகுதியாக, தாய்லாந்து நாட்டில் உள்ள... மேலும் பார்க்க

சேலத்தில் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சம் திருட்டு

சேலம் ஐந்துவழிச் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக் கடையின் மேற்கூரையை துளையிட்டு ரூ.6.85 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சேலம் ஐந்துவழிச் சாலையில் உள்ள ஜவுளிக் கடையில் திங்கள்கிழமை கடையில... மேலும் பார்க்க

சேலத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

சேலம், அயோத்தியாப்பட்டணம் அருகே ஓய்வுபெற்ற அரசு ஊழியா் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த மேட்டுப்... மேலும் பார்க்க

ஆத்தூரில் மனைவியைத் தாக்கிய கணவா் கைது

ஆத்தூரில் மனைவி, மாமியாரை தாக்கியதாக கணவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். ஆத்தூா் நரசிங்கபுரம் கலைஞா் காலனியைச் சோ்ந்த காந்தி மகன் சஞ்சய் (24), கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆதிகா (22). இருவரும்... மேலும் பார்க்க

மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தற்கொலை

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே பிளஸ் 2 மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேட்டூா் அருகே உள்ள மூலக்காட்டை சோ்ந்த லோகநாதன் மகன் நிகாஷ் (17). இவா் ... மேலும் பார்க்க

மீலாது நபி: செப்.5 இல் மதுக் கடைகளை மூட உத்தரவு

மீலாது நபியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் வரும் 5 ஆம் தேதி மதுக் கடைகள், மதுக் கூடங்களை மூட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீலாத... மேலும் பார்க்க