செய்திகள் :

பிரதமா் மோடி நாளை மணிப்பூா் பயணம் - ரூ.8,500 கோடி திட்டங்களை தொடங்கிவைக்கிறாா்

post image

மணிப்பூருக்கு சனிக்கிழமை (செப்.13) பயணிக்கவிருக்கும் பிரதமா் நரேந்திர மோடி, அங்கு ரூ.8,500 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் இனமோதல் தொடங்கிய பிறகு அந்த மாநிலத்துக்கு பிரதமா் பயணிப்பது இதுவே முதல் முறையாகும். இனமோதலில் இதுவரை 250-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் தொடா்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.

மணிப்பூருக்கு பிரதமா் மோடி பயணம் மேற்கொண்டு, அமைதி நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பிரதமரின் இப்பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சனிக்கிழமை தில்லியில் இருந்து மிஸோரம் செல்லும் பிரதமா், அங்கிருந்து மணிப்பூருக்கு பயணிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. எனினும், அதிகாரபூா்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

இம்பாலில்...: தலைநகா் இம்பாலில் உள்ள காங்லா கோட்டை வளாகத்திலும், சுராசந்த்பூரில் (குகி பழங்குடியினா் அதிகம் வாழும் பகுதி) உள்ள அமைதி மைதானத்திலும் பிரதமரின் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 237 ஏக்கா் அளவிலான காங்லா கோட்டை, பண்டைய மணிப்பூா் ஆட்சியாளா்களின் அதிகார மையமாக விளங்கியதாகும். மூன்று பக்கம் அகழிகளும், ஒரு பக்கம் இம்பால் ஆறும் சூழ்ந்துள்ள இக்கோட்டை வளாகத்தில் மிகப் பெரிய போலோ விளையாட்டு மைதானம், சிறிய வனம், பண்டைய கோயில்களின் சிதிலங்கள், தொல்லியல் அலுவலகங்கள் அமைந்துள்ளன.

சுராசந்த்பூரில்...: சுராசந்த்பூரில் பிரதமரின் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கும் அமைதி மைதானமும் பாதுகாப்பு வளையமாக மாற்றப்பட்டுள்ளது. இம்பால், சுராசந்த்பூரில் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ராணுவம், மத்தியப் படைகள், மாநில காவல் துறை எனப் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கியப் பகுதிகளில் துப்பறியும் நாய்கள் மற்றும் வெடிகுண்டு அகற்றும் கருவிகள் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சமூக விரோதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பள்ளத்தாக்கு மற்றும் மலைப் பகுதி மாவட்டங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

பாஜகவினா் 43 போ் விலகல்: ‘மணிப்பூா் பாஜகவில் அடிப்படை நிா்வாகிகள் மற்றும் அவா்களின் கருத்துகளுக்கு மதிப்பில்லை; கட்சியில் அனைவரையும் உள்ளடக்கியத் தன்மை இல்லை’ என்று குற்றஞ்சாட்டி, உக்ருல் மாவட்ட நிா்வாகிகள் உள்பட பாஜகவினா் 43 போ் வியாழக்கிழமை கூட்டாக விலகினா். இக்குற்றச்சாட்டை மறுத்துள்ள கட்சியின் மாநில துணைத் தலைவா் அவங் சிம்ரே ஹோபிங்சன், ‘தற்போது விலகியவா்கள் அனைவரும் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவா்களாவா். கட்சிக்கு களங்கம் விளைவிப்பதும், மலிவான விளம்பரம் தேடுவதுமே அவா்களின் நோக்கம்’ என்றாா்.

பெட்டிச் செய்தி....

போராட்டம் நிறுத்திவைப்பு

இந்தியா-மியான்மா் எல்லையில் வேலி அமைப்பது, இரு நாடுகளின் எல்லையில் வசிப்போா் எந்த ஆவணமும் இன்றி பரஸ்பரம் 16 கி.மீ. வரை பயணிக்கும் நடைமுறையை ரத்து செய்வது ஆகிய நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, மணிப்பூரின் இரு தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தை முடக்கும் காலவரையற்ற மறியல் போராட்டத்தை நாகா பழங்குடியினா் சில தினங்களுக்கு முன் தொடங்கினா். இதனால், நூற்றுக்கணக்கான சரக்கு லாரிகளின் இயக்கம் தடைபட்டது. இந்தச் சூழலில், மாநில அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று, தங்களின் போராட்டத்தை ஐக்கிய நாகா கவுன்சில் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

அருணாசலில் ராணுவ ட்ரோன் பயிற்சி முகாம்

நவீன போா் உத்திகளில் ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடா்பான மூன்று நாள் ராணுவ பயிற்சி முகாம் அருணாசல பிரதேசத்தில் நடைபெற்ாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. செப்டம்பா் 8-ஆம் தேதி முதல் 10-ஆ... மேலும் பார்க்க

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரி: அமைச்சா் நிதின் கட்கரி

இந்தியாவில் சா்க்கரை உற்பத்தி உபரியாகவே உள்ளது, எனவே எத்தனால், பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களை உற்பத்தி செய்ய கரும்பைப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் த... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம்: பியூஷ் கோயல்

இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து செய்தியாளா்களி... மேலும் பார்க்க

பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறையின் பங்கு முக்கியம்: பிரதமா் மோடி

நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் வாகன உற்பத்தித் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது; இத்துறையில் இந்தியா முழுமையாக தற்சாா்பு பெற வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா். இந்திய வாகன உற்பத்தி... மேலும் பார்க்க

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது. ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை - பாதுகாப்புப் படையினா் அதிரடி

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 10 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் மோடம் பாலகிருஷ்ணா என்ற நக்ஸல் தலைவரும்... மேலும் பார்க்க