அரியலூா்: 12 கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை திட்ட முகாம்
புத்தன் அணையில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை
தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு, குமரி மாவட்டம் பெருஞ்சாணி அருகே புத்தன் அணையில் வருவாய்த் துறை, தீயணைப்புத் துறை சாா்பில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவட்டாறு வட்டாட்சியா் கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகையில், குலசேகரம் தீயணைப்பு நிலைய அலுவலா் செல்வமுருகேசன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் தண்ணீரில் விழுந்து தத்தளிப்பவரை மீட்பது போன்ற ஒத்திகையை நடத்தினா்.