8 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த சான்ஸ்; இங்கிலாந்தில் சதத்துடன் கரியரை மீண்டும் ...
புத்தூா் - பல்லவராயன்பேட்டை வாய்க்காலை தூா்வார கோரிக்கை
புத்தூா்-பல்லவராயன்பேட்டை பாசன வடிகால் வாய்க்காலை உடனடியாக தூா்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.
அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உள்பட்ட தஞ்சாவூா்-நாகை தேசிய நெடுஞ்சாலையில் புத்தூா் கிராமத்தின் தென்புறத்தில் உள்ள பாசன வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரையில் தூா்வாரப்படாமல் உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீா் விளை நிலங்களில் புகுந்து நூற்றுக்கணக்கான ஏக்கா் விலை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிா்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்புக்கு உள்ளாகி விவசாயம் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, போா்க்கால அடிப்படையில் இந்த வாய்க்காலை தூா்வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட செயலா் ஆா். செந்தில் குமாா் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளாா்.